செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? விஜய் கண்டனம்

சென்னை, ஆக. 14– தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த தி.மு.க. அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள […]

Loading

செய்திகள்

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்: நடிகர் விஜய் அழைப்பு

சென்னை, ஆக. 12– வைகை மண்ணில் நடக்கும் மாநாடு வாகை சூடும் வரலாறு என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார். மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி […]

Loading

செய்திகள்

மதுரையில் 21–ந்தேதி பிரமாண்ட த.வெ.க. மாநாடு

மதுரை, ஆக.8- மதுரையில் கோட்டை வடிவில் த.வெ.க. மாநாட்டு மேடை பிரமாண்ட மாக அமைக்கப்பட்டு வருகிறது. தொண்டர் களை விஜய் சந்திக்கும் வகையில் 200 மீட்டரில் நடைமேடையும் அமைக்கும் பணியும் நடக்கிறது. மதுரையில் கட்சியின் 2-வது மாநாட்டை 21-ந்தேதி நடத்த த.வெ.க. முடிவு செய்துள்ளது. தற்போது முழு வீச்சில் மாநாட்டு மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பந்தல் 250 அடி நீளத்தில் 70 அடி அகலத்தில் கோட்டை வடிவில் வடிவமைக்கப்பட உள்ளது. முதல் […]

Loading

செய்திகள்

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூலை 27– தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலர் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் நடிகர் […]

Loading

செய்திகள்

தி.மு.க.– ‘சாரிம்மா’ மாடல் சர்க்காராக மாறி விட்டது: விஜய் ஆவேச பேச்சு

சென்னை, ஜூலை 13– வெற்று விளம்பர மாடல் தி.மு.க. சர்கார், இப்பொழுது ‘சாரிம்மா மாடல்’ சர்காராக மாறிவிட்டது என சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையிலான ஆர்ப்பாட்டம்: பெண் தொண்டர்கள் பலர் மயக்கம்

சென்னை, ஜூலை 13 தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நடத்தப்பட்டது. தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Loading

செய்திகள்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை: விஜய் கண்டனம்

சென்னை, ஜூலை 1– சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Loading