செய்திகள்

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்

கோவை, ஜன. 27– தவெகவுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த செங்கோட்டையனிடம், தவெக மீதான அண்ணா தி.மு.க. விமர்சனம், அண்ணா தி.மு.க. கூட்டணியில் தினகரன் இணைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:– பா.ம.க. ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு ‘விசில்’ சின்னம்

விஜய்யின் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் கமிஷன் ‘விசில்’ சின்னம் வழங்கியுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் கமிஷன் தேர்தல் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. பல்வேறு பணிகளை அது முன்னெடுத்து இருந்தாலும், தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற, அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கும் பணியையும் […]

Loading

செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

புதுடெல்லி, ஜன. 12– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக […]

Loading

செய்திகள்

பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் செங்கோட்டையன் பேட்டி

கோவை, டிச. 20– பொங்கலுக்குப் பிறகு தவெகவின் வியூகத்தைப் பார்த்து நாடே வியக்கும் என தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கே.ஏ. செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தவெக மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக தவெக சார்பில் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் .தவழும் குழந்தைகள்தான் பெரியவராவார்கள். பெரியவரான பிறகுதான் தன்னாட்சி நடத்துவார்கள். இதுதான் வழக்கமான ஒன்று. நாங்கள் களத்தில் இருக்கிறோமா இல்லையா என்பது தேர்தல் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் 5 பேர் குழு அமைப்பு

சென்னை, நவ. 22– தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது எனவும் […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்  6வது நாளாக சிபிஐ விசாரணை

கரூர், நவ. 14– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் 7 பேரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் […]

Loading

செய்திகள்

விஜயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? — தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்

சென்னை, நவ. 5: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் ஒரு மாத காலம் மந்தமாக இருந்தன. இப்போது, அந்த அமைதி முறிந்து கட்சிச் செயல்பாடுகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சிறப்பு […]

Loading

செய்திகள்

‘‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்’’: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்

கரூர், அக். 28– கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர். கரூரில் செப்டம்ர் 27–ந் தேதியில், விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 நாள்கள் பிறகு, பாதிக்கப்பட்டோரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட விஜய், அவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு வரவழைத்து, நேற்று மாமல்லாபுரத்தில் […]

Loading

செய்திகள்

தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் விஜய்யுடன் சந்திப்பு

சென்னை, அக். 14– கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 9– சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. அவருக்கு மத்திய அரசு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் விஜய் வீட்டிற்குள், மன நலம் பாதித்த நபர் ஒருவர் நுழைந்தார். இதனால், ஒய் பிரிவு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக […]

Loading