செய்திகள்

அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை, ஜன. 20: அரசுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை கவர்னர் வைத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பா.ஜ.க.வின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வந்துள்ளார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் இறுதியில் தேசிய கீதம் பாடுவதும் சட்டசபையின் மரபு. ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது மைக் ஆப் செய்யப்பட்டது என ஆளுநர் மாளிகை கூறியது முற்றிலும் தவறு. […]

Loading