தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி போராட்டம் புதுடெல்லி, ஆக. 18– பீகார்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து […]
![]()


