செய்திகள்

புதுடெல்லி் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார் விஜய்

சென்னை, ஜன. 19– கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணைக்காக புதுடெல்லி் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் […]

Loading

செய்திகள்

வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலை: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.19- வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயன் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாயை அமைத்தார். இந்த கால்வாய் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி, ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. அவர் அமைத்த காலிங்கராயன் […]

Loading

செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு

சென்னை, ஜன.19-– தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தீவிர முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக, வரும் 21 ம் தேதி சென்னை வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அ.தி.மு.க., பா.ஜ.க., […]

Loading

செய்திகள்

கடலூரில் ஜெஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

கடலூர், ஜன. 19– கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இரா.சுதன் பேசியதாவது: முதலமைச்சர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான தொடக்க கல்வியினை வழங்கிடவும், இடைநிற்றலின்றி மாணவர்கள் கல்வி கற்றிடவும், பள்ளிக்கல்வியினை தொடர்ந்து சிறப்பான உயர்கல்வியை மாணவர்கள் பெறுவதற்கும் பல்வேறு […]

Loading

செய்திகள்

மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்- அபராதம்

சென்னை, ஜன.19– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய கடற்கரைப் பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டிய 241 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 500 – அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு மார்ச் 30-ந்தேதி தேர்தல்

சென்னை, ஜன.19- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பார் கவுன்சிலுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்களை மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டதால், உறுப்பினர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் […]

Loading

செய்திகள்

ஐகோர்ட்டு விருந்தினர் மாளிகையின் புதிய நிர்வாக அலுவலகம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.19- ஜூடிசியல் அகாடமியில் கோர்ட்டு விருந்தினர் மாளிகைக்கு புதிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தாமரை இல்லத்தில், நீதித்துறை அலுவலகத்துக்காக பல அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஜி.ஜெயச்சந்திரன், […]

Loading

செய்திகள்

109வது பிறந்த நாள் எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா சிலைக்கும் எடப்பாடி […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதி மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார். ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என […]

Loading

செய்திகள்

ஈரானில் 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு

வாஷிங்டன், ஜன. 17– ஈரான் அரசு 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு, தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, […]

Loading