மும்பையில் இந்தி எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

மும்பை இந்தி எதிர்ப்பு பேரணி எழுச்சியும் உற்சாகமும் தருகிறது: ஸ்டாலின்

சென்னை, ஜூலை.6- மும்பையில் நடந்த இந்தி எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் புகட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்ப தாவது:-– இந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் […]

Loading

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை
செய்திகள்

கனமழை எச்சரிக்கை: தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

புது டெல்லி, ஜூலை 6 – நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, பீகார், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தது 6 மாநிலங்களில் கனமழையும் புயல் வீசும் சாத்தியமும் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொங்கண் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அறுவடைத் திருவிழா…! – ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
செய்திகள்

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ‘இன்ஸ்டா’வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது

விழுப்புரம், ஜூலை 5– நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட நான்கு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், பர்கத் நகர்,வாட்டர் டேங்க் அருகே உள்ள தோப்பில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள், சணல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருந்தது. […]

Loading

செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி

சென்னை, ஜூலை 5– சென்னையில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை

கன்னியாகுமரி, ஜூலை 5– காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். நிதின்ராஜ் பி.இ. படித்துள்ளார்.இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் […]

Loading

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

சாத்தூர், ஜூலை 5– விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 1-ம் தேதி காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி -அருகே சின்னகாமன்பட்டியில், கமல்குமார் என்பவருக்கு சொந்தமான, ‘கோகுலேஷ்’ பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இந்த ஆலையில் 1–ந் தேதி காலை 8.30 மணி அளவில் தொழிலாளர்கள் மருந்து கலவை செய்யும் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.72,480க்கு விற்பனை

சென்னை, ஜூலை 5– தங்கம் விலை இன்று உயர்ந்து, சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14ந்தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

கதைகள் சிறுகதை

அம்மா அம்மாதான் – ஜெ. மகேந்திரன்

வறுமை, வறுமை, வறுமை நிழலாகத் தாண்டவமாடியது முத்துப்பாண்டியின் வீட்டில், ‘‘அம்மா இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும்’’ என்றான் மகன் , அடுப்பறையில் இருக்கும் நீர் மோரை சாப்பிட்டு போடா. ‘என்ன’ இன்டர்வியூக்கா பதிலை தயார் செய்து விட்டாயா’ இது நீ போகிற 10வது இன்டர்வியூ. கடவுள் ஏன் தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ? நல்லவர்களிடத்தில் விளையாடுவது அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிபோல. வியர்வை சிந்த உழைத்து என்னப் பயன்? பையனை கரை சேர்க்க முடியவில்லையே, ‘நான் கண் மூடி விட்டால் […]

Loading