செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. பதவியேற்க கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டார்

சென்னை, ஜூலை 24– மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை பதவியேற்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்கள், நாளை (ஜூலை 25) பதவியேற்கின்றனர். திமுக சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக, நாளை (ஜூலை 25) பதவியேற்கின்றனர். இதில் குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவரும், பிரபல நடிகருமான […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, ஜூலை 23– தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,”மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் […]

Loading

செய்திகள்

ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான குறியீட்டின் மூலம் 2ம் இடத்தில் தமிழ்நாடு

‘தேசிய சராசரியை விஞ்சினோம்’ : தங்கம் தென்னரசுவின் பதிவை மேற்கோள்காட்டி ஸ்டாலின் பெருமிதம் சென்னை, ஜூலை 23– ‘‘தேசிய சராசரியை விஞ்சினோம். கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-–ல் முதல் மாநிலமாக உயருவோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவின் பதிவைமேற்கோள்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சமூகவலைதளப்பதிவு வருமாறு:– […]

Loading

செய்திகள்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்:சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜூலை 23– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 73,440 ரூபாய்க்கும் […]

Loading

செய்திகள்

“தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது”

தமிழக அரசு பெருமிதம் சென்னை, ஜூலை.23- தனிநபர் வருமானத்தில் 2வது இடம் பெற்ற தகவல் வெளியன நிலையில், தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2024–2025ம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. […]

Loading

செய்திகள்

விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்: 26-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

தூத்துக்குடி, ஜூலை 23–- அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 26–ந்தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரது சுற்றுப்பயண விவரம் நேற்று அதிகாரப் பூர்வமாக வெளி யிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-– வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பிரதமர் மோடி மாலத்தீவு தலைநகரம் மாலே விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் புறப்படுகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் […]

Loading

செய்திகள்

ஆன்லைன் பந்தய செயலி வழக்கு: ஜூலை 21ல் ஆஜராக கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி, ஜூலை 19– பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட […]

Loading

செய்திகள்

திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீ விபத்து; ரெயில் சேவைகள் பாதிப்பு

திருவள்ளூர், ஜூலை 13- திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை டீசல் ஏற்றிய சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 5:30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே டீசல் நிரப்பப்பட்ட சரக்கு ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன், அதில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ பற்றியது. தீ நான்கு முதல் ஐந்து பெட்டிகள் வரை […]

Loading

செய்திகள்

12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம்: துரை வைகோ

கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ திருச்சி, ஜூலை 12– 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ […]

Loading

செய்திகள்

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

சென்னை, ஜூலை 12– வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகள், தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதியை உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் […]

Loading