செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%

சென்னை, ஆக.6– 14 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2 ஆயிரத்து 538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா :ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஆக 1– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-–ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் […]

Loading

செய்திகள்

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது

அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சென்னை, ஜூலை.31- ‘தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது’ என அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார். முதன்மை […]

Loading

செய்திகள்

மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை: ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஜூலை 28– “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 2–ந் தேதி அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையொட்டி இப்பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு களஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் […]

Loading

செய்திகள்

‘ஓலைச்சுவடி அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தஞ்சை மணிமாறன்

மோடி பாராட்டு புதுடெல்லி, ஜூலை 27– ”ஓலைச்சுவடிகளில் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அத்தகைய பணியை செய்து வரும் தஞ்சையை சேர்ந்த மணிமாறனின் பணி பாராட்டுக்குரியது,” என்று, மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: தொடர்ந்து நமது நாட்டு மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேசுவோம். சமீபத்தில் விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது […]

Loading

செய்திகள்

2–ம் சுற்று என்ஜினீயரிங் கலந்தாய்வு துவங்கியது

சென்னை, ஜூலை.27- என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கியது. என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 14-ந் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 16-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், 17-ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெளியிட்டும், 17 மற்றும் 18-ந் தேதிகளில் அந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இப்படியாக நடந்த முதல் சுற்று கலந்தாய்வில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி

பிரதமர் மோடி பேச்சு தூத்துக்குடி, ஜூலை.27- ”மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை நிதியை வழங்கியுள்ளது. இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையுடன் ஒப்பிடும் போது, 3 மடங்கு அதிகம். நீலப்புரட்சி வாயிலாக, மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளில் கடந்த […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரியில் அரசு பஸ் – மோட்டார் சைக்கிள்

கன்னியாகுமரி, ஜூலை 26– கன்னியாகுமரியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அப்சல் (வயது 17), அஜ்மல் (வயது 16), நாசில் (வயது 15), அஜித் (வயது 17). இதில் அஜ்மல் பிளஸ் 2, நாசில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் குழித்துறையில் நடைபெற்று வரும் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, ஜூலை 25– வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை, ஜூலை 24– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் இன்று தெரிவித்தார். மேலும், ஆஞ்சியோ பரிசோதனையில் முதல்வருக்கு அடைப்பு எதுவும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலமைச்சர் 3 […]

Loading