செய்திகள்

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் 2025ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார். பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற […]

Loading

செய்திகள்

சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்

சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தைத்யொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின கொடி ஏற்றுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீசாரின் மோட்டார் சைக்கிள் புடைசூழ கோட்டைகொத்தளத்திற்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் நா. முருகானந்தம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தென்னிந்தியப் பகுதிகளின் தலைமைப் படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி. ஸ்ரீரீஹரி, தமிழ்நாடு மற்றும் […]

Loading

செய்திகள்

50 சேவைகளுக்காக ‘மெட்டா’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

மின்சாரம் – குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம்* மாநகராட்சி வரிகளை கட்டலாம்; மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கலாம்: பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்து சென்னை, ஆக 15– தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் அடிப்படையிலான குடிமக்கள் சேவைகளை அறிமுகப்படுத்த மெட்டாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. முதல் கட்டத்தில் பயன்பாட்டு கட்டண செலுத்துதல் உட்பட 50 குடிமக்கள் சேவைகள் வழங்கப்படும்.மக்கள், புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 46.5 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை, ஆக.14– தமிழ்நாடு வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாக இந்த ஆண்டு 46.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 2025–-26ம் ஆண்டு நெல் கொள்முதல் பருவத்தில் 1.9.2025 முதல் நெல்கொள்முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல் விவசாயிகள் […]

Loading

செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யும் ‘தாயுமானவர் திட்டம்’

சென்னை, ஆக.12– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் […]

Loading

செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள்

சென்னை, ஆக 12– 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடையும் ‘‘தாயுமானவர் திட்டம்” தொடங்கி வைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியாவுக்கே முன்மாதிரியான முயற்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இது குறித்து, அவர் சமூகவலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப்பதிவில் கூறியிருப்பதாவது:– வணக்கம்! திராவிட மாடல் […]

Loading

செய்திகள்

வயிற்றெரிச்சலில் பேசி வரும் எடப்பாடி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

சென்னை, ஆக, 8- அண்மையில் வெளியான ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து எடப்பாடி வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார் என்று டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் அண்மையில் வெளியான மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை சுட்டிகாட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய அரசு தமிழ் நாடு அரசு தான் என பெருமிதம் […]

Loading

செய்திகள்

தமிழகம் அதிக வளர்ச்சி என்பது தி.மு.க.வின் பொய், புரளி

சென்னை, ஆக.8- தமிழகம் அதிக வளர்ச்சி என்பது தி.மு.க.வின் புரளி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் விடியா தி.மு.க. அரசு, ‘இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு’ என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் […]

Loading

செய்திகள்

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை

சென்னை, ஆக.7– அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை 6 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் நெவில் சாலமன், முத்துக்குமரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– இந்தியாவில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை இங்கு 6 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சைகளும், 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய இடையீட்டு சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு இருதய […]

Loading

செய்திகள்

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு

சென்னை, ஆக 7– சென்னை கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகிறார். சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர் விருதை’ கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குகிறார். பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ. பழநியப்பன், பேராசிரியர் சாரதா நம்பி […]

Loading