செய்திகள்

நெல்லை ரெயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை: பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது

திருநெல்வேலி, செப். 6– திருநெல்வேலி ரெயில் நிலையத்துக்கு முன்பு நேற்றிரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (வயது19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு நெல்லை ரெயில் நிலையம் முன்பு அமைந்துள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர்.அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் 78 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, செப்.2– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 9,705 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

7 நாள் அரசு முறைப் பயணம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார் ஸ்டாலின்

சென்னை, ஆக.30– தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 7 நாள் அரசு முறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். ‘எந்த ஒரு சதியையும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு’ என்று அப்போது ஒரு கேள்விக்கான பதிலில் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:– ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று […]

Loading

செய்திகள்

ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை: பொதுமக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஆக. 23– பீகார் மாநிலம் ராஜ்கிரில் 29–ந் தேதி முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ள “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் 8 ஆசிய நாடுகள் மோதுகின்றன, இப்போட்டியில் […]

Loading

செய்திகள்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு : ஸ்டாலின்

சென்னை, ஆக. 22– இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று சென்னை போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த […]

Loading

செய்திகள்

21–ந்தேதி மாநில மாநாடு: த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

‘மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும்’ என உறுதி சென்னை, ஆக. 18– மதுரை பாரப்பத்தியில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த […]

Loading

செய்திகள்

கவர்னரை வைத்து இழிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.

தர்மபுரி, ஆக.17– கவர்னரை வைத்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் […]

Loading

செய்திகள்

சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ‘ரேபிஸ்’ பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை : தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, ஆக 16– நாய்களின் வெறிச்செயலால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகரத்திற்குட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இந்தியப் பெண்கள் மோட்டார் சங்கம் 2 சக்கர வாகனப் பேரணி: உதயநிதி துவக்கினார்

சென்னை, ஆக 16– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2025 ஒவ்வொரு மாவட்டத்திலும் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி

சென்னை, ஆக. 15– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தூய்மைப் பணியாளர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய […]

Loading