செய்திகள்

வலுவான உறவுகளை வலுப்படுத்தும் மன நலன்: செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் பயிலரங்கு

சென்னை, நவ. 13– செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில், பள்ளியின் தாளாளர் மீனா முத்தையாவின் தலைமையில் பிரக்யா உளவியல் விழா 2025, மனித தொடர்புகள் மற்றும் பற்று என்ற கருப்பொருளில் நடந்தது. புகழ்பெற்ற மருத்துவ உளவியலாளர் டாக்டர் கீர்த்தி பாய் உரையாற்றினார். பற்றுணர்வை வளர்ப்பதில் உணர்ச்சிபூர்வமான பரஸ்பரம் மிக முக்கியமானது, நாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் நம்பிக்கை உருவாகிறது. அர்த்தமுள்ள உறவுகளுக்கு உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் பச்சாதாபம் அவசியம் என்பதை எடுத்துரைத்து, ஒரு நுண்ணறிவுள்ள உரையை நிகழ்த்தினார். செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் முதல்வர் டாக்டர் அமுதா […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானி-தமிழ் சேவை விருது

சென்னை, நவ. 13- வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழங்கப்படும் ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ராஜஸ்தானி அசோசியேசன்-தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, அதன் மதிப்புமிக்க ‘ராஜஸ்தானி–தமிழ் சேவா விருதுகள் 2026’ இன் 2வது பதிப்பை பெருமையுடன் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காகத் தனித்துவமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ஒரு முயற்சியே […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனை வளாகம் : ஸ்டாலின் திறந்தார்

சென்னை, நவ. 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக லாபகரமாக செயல்பட்டு […]

Loading

செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு

சென்னை, நவ. 11– 2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு […]

Loading

செய்திகள்

பீகாரில் 2–ம் கட்ட சட்டசபை தேர்தல்: 122 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.11- பீகார் சட்டசபையில் 122 தொகுதிகளுக்கான 2–ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி …. சதவீத வாக்குகள் பதிவானது. இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் 14-ந் தேதி எண்ணப்படுகிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது ; பிரதமர் மோடி உறுதி

திம்பு, நவ. 11– டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை பூடான் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:– டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. […]

Loading

செய்திகள்

தர்மேந்திரா உடல்நிலை குறித்து மனைவி ஹேமமாலினி விளக்கம்

மும்பை, நவ. 11– இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ‘நட்சத்திர’ மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார். இந்தித் திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தர்மேந்திரா (வயது 89). மூச்சுத் திணறல், உயர் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் தர்மேந்திரா இருப்பதாகவும், […]

Loading

செய்திகள்

தெலங்கானா இடைத்தேர்தலில் டிரோன் கண்காணிப்பு

ஐதராபாத், நவ. 11- தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள், டிரோன்கள் மூலம் முதன்முறையாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுவாக அமைதியான சூழலே நிலவினாலும், நாள் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள், ஆங்காங்கே சிறிய மோதல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்த புகார்கள் சில வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ளன. டிரோன் மூலம் கண்காணிப்பு இந்நிலையில் மொத்தம் 4,01,365 […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர்–ஐ கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சென்னை, நவ. 11– தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. […]

Loading