செய்திகள்

30 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்று குஷிப்படுத்திய ‘ரெயின் டிராப்ஸ்’ அறக்கட்டளை அமைச்சர் கீதா ஜீவன், விஜிபி சந்தோஷம் உடன் பயணித்தனர்.

சென்னை, நவ.17– குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான “வானமே எல்லை” எனும் அருமையான ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக சென்னை நகரிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர முன்முயற்சியில், ஒரு திருநங்கை மாணவர் மற்றும் பார்வை குறைபாடுள்ள ஒரு மாணவர் […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் கூட்டுறவு வாரவிழாவில் 1111 மகளிருக்கு நல உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம் நவ. 17– காஞ்சிபுரம் செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடப்பு ஆண்டில் “தன்னிறைவு பெற உதவும் கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்” என்ற தலைப்பில் 7 நாள் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 1111 உறுப்பினர்களுக்கு ரூ10.96 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன், 37 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை […]

Loading

செய்திகள்

ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண் கல்லூரி ஏற்பாட்டில் உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு

சென்னை, நவ. 17– நாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என மேலாண் தொழில்நுட்பக் கல்வி ஆலோசகர் பி.அன்புத் தம்பி கூறினார். மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் வணிக மேலாண் கல்லூரி சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசுகையில், ‘சர்வதேச அளவில் கணினி விளையாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தற்போது அனைத்துத் துறைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை: ஷேக் ஹசீனா உருக்கம்

புதுடில்லி: மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், இன்று (நவ.,17) தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு வெளியேறியது வேதனை அளிக்கிறது என ஷேக் ஹசீனா உருக்கமாக தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். […]

Loading

செய்திகள்

மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு

சென்னை, நவ.15- அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் படுக்கை வசதி கொண்ட 8 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்.) அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. இதுவரையில் இந்தியா முழுவதும் 92 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் […]

Loading

செய்திகள்

இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை, நவ.15- இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான […]

Loading

செய்திகள்

பிர்சா முண்டா பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, நவ. 15– பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஜார்க்கண்ட் மாநிலம் உலி ஹாட்டு பகுதியில் பழங்குடியினர் சமூகத்தில் பிறந்த பிர்சா முண்டா, சிறு வயதிலேயே ஆங்கிலேயே ஆட்சி அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார். 25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், பழங்குடியினரின் நிலம் மற்றும் உரிமைகளைக் காக்கப் போராடினார். இதனால், ‘நிலத்தின் தந்தை’ எனப் பழங்குடினரால் அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்துசென்னையில் 17–ந் தேதி அண்ணா தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.15– சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்து சென்னையில் அண்ணா தி.மு.க. 9 மாவட்ட செயலாளர்கள் வரும் 17–ந் தேதி (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கு அண்ணா திமுக சார்பில் இதற்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணியினர் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 4–ந் தேதி தொடங்கி படிப்படியாக வீடு வீடாக சென்று […]

Loading

செய்திகள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில்அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்:எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம், நவ.15-– வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்றும், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-– பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. […]

Loading

செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை, நவ.15- சிறப்பு தீவிர திருத்த பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற ‘‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகி கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- எங்கு சென்றாலும் எஸ்.ஐ.ஆர். பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஒவ்வொருவரும், ‘‘நாங்கள் இந்திய குடிமக்கள் தான்’’ என்று நிரூபிக்க […]

Loading