செய்திகள்

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு

சென்னை, நவ. 26: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பேரிடரை […]

Loading

செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

கவுகாத்தி, நவ. 26– 2-வது டெஸ்டிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா இந்திய அணியை ஒயிட்வாஸ் செய்து 25 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்தது. கவுகாத்தியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, நவ. 26– சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 18 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு […]

Loading

செய்திகள்

சென்னை கே.கே.நகர்–கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 2 புதிய விற்பனை நிலையம் திறப்பு

சென்னை, நவ. 26– சுத்தமான நெய் இனிப்புகள் மற்றும் காரஸ்களுக்குப் பெயர் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னையில் நாளை (27ந் தேதி) கே.கே. நகர் (காசி தியேட்டருக்கு எதிரே) அஞ்சுகம் நகர், 2வது தெரு, ஜாஃபர்கான் பேட்டை, மற்றும் கூடுவாஞ்சேரி (ஜிஆர்டி ஜூவல்லரிக்கு எதிரே) காந்தி வளாகம், ஜிஎஸ்டி சாலையில் 2 புதிய கிளைகளைத் திறக்கிறது. தொடக்க நாள் சலுகையில் 1 கிலோ இனிப்புகள் வாங்கும் போது 1 கிலோ மைசூர்பா பரிசாகக் கிடைக்கும். இந்த […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26 சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் இருக்கின்ற, தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்ய […]

Loading

செய்திகள்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை, நவ. 26– கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, […]

Loading

செய்திகள்

கார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை: கடலூர் கலெக்டர் வழங்கினார்

கடலூர், நவ. 26– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கார் விபத்தில் காயமடைந்த 2 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: கடலூர் வட்டத்தை சேர்ந்த கௌசல்யா மற்றும் அவரது கணவர் எள்ளப்பன் ஆகியோர் விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி 20.09.2025 அன்று காரில் பயணம் மேற்கொண்ட போது, ஐயூர் அகரம் பாலம் […]

Loading

செய்திகள்

பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி: விழுப்புரம் கலெக்டர் துவக்கி வைத்தார்

விழுப்புரம், நவ. 26– விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள் 37 மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான […]

Loading

செய்திகள்

மணல் திருட்டை தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்

சென்னை, நவ. 25: மணல் திருட்டை தடுத்து நிறுத்தாத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கின்றன. இதன் விளைவாக, வன்முறையாளர்களின் புகலிடமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு வருகிறது. 2021–ம் ஆண்டு தி.மு.க. […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

சென்னை, நவ. 25– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2025ம் ஆண்டில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் ரூ.79,57,509 மதிப்புள்ள 1769 பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீ அருள் ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருட்டு தடுப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரங்கள் பயணிகளுக்கு தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பது மற்றும் பயணத்தின் போது […]

Loading