செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 16: தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16–ந்தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒருசில […]

Loading

செய்திகள்

திமுக அரசு மாநகராட்சியை கண்டித்து கும்பகோணத்தில் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை, டிச.16: கும்பகோணம் மாநகராட்சியில் தற்போதைய பேருந்து நிலையத்திலேயே போதுமான இட வசதி உள்ள நிலையில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளின் உறவினர்களுக்குச் சொந்தமான நிலங்களின் மதிப்பு உயர வேண்டும் என்ற சுயநலத்துடன், அவர்களது நிலங்களுக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கத் துடிக்கும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும், கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட […]

Loading

செய்திகள்

பாடியில் பிரமாண்ட போத்தீஸ் ஜவுளி, நகை மாளிகை துவக்க விழாவையொட்டி தள்ளுபடி, விலை குறைப்பு சலுகைகள்

சென்னை, டிச.16: சென்னை பாடியில் போத்தீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜவுளி, நகைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாடியில் பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மகால் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போத்தீஸ் நிறுவனத்தின் இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமான இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த புதிய கிளையை ஐ.சி.எப். பொதுமேலாளர் சுப்பாராவ், அவருடைய மனைவியும், ஐ.சி.எப். பெண்கள் அமைப்பின் தலைவியுமான […]

Loading

செய்திகள்

16 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியை மடக்கிப் பிடித்த நபருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் நேரில் பாராட்டு

சிட்னி, டிச. 16: 16 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிய பயங்கரவாதியை வெறும் கைகளால் மடக்கிப் பிடித்த நபரை அந்நாட்டு பிரதமர் பாராட்டியுள்ளார் ‘ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என்று அவரைப் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவன் பின்னால் இருந்து ஒருவர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். […]

Loading

செய்திகள் முழு தகவல்

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 16: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை, திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலக் குழுத்தலைவர்களிடம் தலா 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக திருவள்ளூர், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற […]

Loading

செய்திகள்

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி இருமுடி விழா லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கினார்

மேல்மருவத்தூர், டிச. 16: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவையொட்டி சக்தி மாலை இருமுடி விழாவை நேற்று காலை கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உருவ சிலைக்கும், […]

Loading

செய்திகள்

விழுப்புரம் கலெக்டர் தலைமையில் வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம், டிச.16: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கடனை விரைந்து வழங்க வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலமாக மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களின் […]

Loading

செய்திகள்

ரெயில் பெட்டிகள் மீது கல் வீசுபவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சென்னை, டிச. 16: ரெயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரெயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ‘வந்தேபாரத்’ ரயில் மீது விருத்தாசலம், தாழநல்லூர் இடையே மணலூர் கிராமத்தில் சிலர் கற்களை வீசினர். இதில் ரயில் பெட்டிககளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிமூட்டம் 4 பேர் பலி

புதுடெல்லி, டிச. 16: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆக்ரா விரைவுச் சாலையில் 8 பஸ்கள் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வேலூர், டிச. 16: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் […]

Loading