செய்திகள் நாடும் நடப்பும்

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பங்கள்: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 2 மாநாடு

சென்னை,, டிச.18: சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொடர்பு கணினி பொறியியல் தொழில்நுட்பத்துறை சார்பில் இயந்திர நுண்ணறிவு மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கான தொழில் நுட்பங்கள் குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு ஓமன் சுல்தானகத்தின் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 இரண்டு நாள் மாநாடு ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்கள் குழும தலைவர் முனைவர் ஆர். சிவக்குமார் மற்றும் இணை தலைவர் முனைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் தலைமையில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் இசை விழாவில் சங்கீத கலாசிகாமணி பட்டம்: ஐஐடி இயக்குனர் காமகோடி வழங்கினார்

சென்னை, டிச.18: சென்னையின் பழமையான சபைகளில் ஒன்று, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியாகும். அதன் 93-ம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கம் மற்றும் விழா நேற்று தொடங்கியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி முன்னிலையில் இந்த விழாவை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் (ஐஐடி) பேராசிரியர் காமகோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது காமகோடி, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு சங்கீத கலாசிகாமணி பட்டத்தையும் ரொக்கப் பரிசையும் வழங்கினார். நல்லி குப்புசாமி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை

சென்னை, டிச. 18: சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், தேசிய அளவில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 போட்டியில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரூ.1.5 லட்சம் ரொக்க பரிசையும் வென்றுள்ளனர். இந்த வெற்றி, சிக்கிம் மாநில சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வின் மூலம் கிடைத்தது. “சிக்கிம் மடாலயங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி, சுற்றுலா மற்றும் பண்பாட்டு பாதுகாப்புக்காக வெளிப்படுத்துதல்” என்ற அரசின் அதிகாரப்பூர்வ பிரச்சினைத் தலைப்பில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. நாடு முழுவதிலிருந்தும் பல அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பல கட்ட மதிப்பீட்டுக்குப் பிறகு 5 அணிகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. […]

Loading

செய்திகள்

ஓ.என்.ஜி.சி. குரூப் நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் கடன்: பரோடா வங்கி வழங்க ஒப்பந்தம்

சென்னை, டிச. 18: பரோடா வங்கி ஓ.என்.ஜி.சி. விதேஷ் (ஓவிஎல்) முழு உரிமை துணை நிறுவனமான ஓவிஎல் ஓவாசீஸ் (ஓஓஐஎல்) நிறுவனத்துக்கு 50 கோடி டாலர் அளவிலான 5 ஆண்டு வெளிநாட்டு நாணய காலக் கடன் வசதிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:– இந்த 50 கோடி டாலர் வசதிக்கான ஒப்பந்தம், பரோடா வங்கியின் ஒருங்கிணைந்த வெளிநாட்டு நாணய கடன் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனை, கிப்ட் சிட்டியின் வளர்ச்சி […]

Loading

செய்திகள்

தேர்தல் வருவதால் ‘லேப்டாப்’ நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி கடும் கண்டனம்

சென்னை, டிச.18: நான்கரை ஆண்டுகளாக மாணவர்களை வஞ்சித்துவிட்டு இப்போது தேர்தல் வருவதால் மாணவர்களுக்கு ‘லேப்டாப்’ வழங்க நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். ஜெயலலிதா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அனைத்து வகைகளிலும் அறிவுப்பூர்வமாக கல்வி பயின்று, தங்களது வாழ்க்கையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தமது ஆட்சிக் காலத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி சாதனை படைத்தார். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், […]

Loading

செய்திகள்

உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண நிதி, பணி நியமன ஆணை: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர், டிச. 18: திருத்தணி அருகே சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட மகமை சார்பில் வெளிச்சந்தையில் பணி நியமன ஆணையினையும் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொண்டாபுரம் ஊராட்சி;யில் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹித் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது […]

Loading

செய்திகள்

நாளை தமிழகத்தை ஆள போவது விஜய் தான்: செங்கோட்டையன் உறுதி

ஈரோடு, டிச. 18: புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதியை காண்கிறேன். 234 தொகுதிகளிலும் விஜய் யாரை காட்டுகிறாரோ அவர்தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் என்று செங்கோட்டையன் உறுதிபட கூறினார். கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 81 நாட்கள் கழித்து, தமிழ்நாட்டில் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் தவெக தலைவர் விஜய். அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின் சொந்த மாவட்டமான ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது. பெருந்துறை – […]

Loading

செய்திகள்

வடபழனி – காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரைப்பை, கல்லீரல் நோய் , சிகிச்சை பிரிவு துவக்கம்

சென்னை, டிச.18: பல்துறை சிகிச்சையில் சென்னையின் முன்னணி மருத்துவமனையான வடபழனி காவேரி மருத்துவமனை, ‘காவேரி செரிமான மண்டல அறிவியல் மையம் என்றசிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சையை வழங்குவதோடு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும். மக்கள் தொகையில் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர், ஆனால் குறைவான […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்: தவெக தொண்டர்கள் திரண்டதால் பரபர

ஈரோடு: டிசம்பர் 18 கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக நடைபெறும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இன்று (டிசம்பர் 18) நடைபெறும் இந்தப் பிரசார கூட்டம் தவெக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு விஜய் கோவைக்கு வருகிறார். சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர் அங்கு சுமார் அரை மணி […]

Loading

செய்திகள்

நீதி கிடைக்க பா.ம.க. போராட்டம் நடத்தும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

தர்மபுரி, டிச.16: தர்மபுரியில் பள்ளி மாணவி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மூடி மறைக்க ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் திமுகவின் நீதியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரின் தவறை மூடி மறைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள் […]

Loading