செய்திகள்

நிதி மேலாண்மை, தரவு சார்ந்த முடிவெடுப்பதில் கணிதத்தின் பயன்பாடு தேசிய பங்குச்சந்தை தலைமை நிபுணர் தீர்த்தங்கர் பட்நாயக் விளக்கம்

சென்னை, டிச. 23– ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புகழ்பெற்ற கணிதவியலாளர் ராமானுஜனின் 138வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய கணித தினம் – 2025 ஐ சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதுநிலை கணிதத் துறையின் “Math π Rates” கிளப், உள் தர உறுதி குழு (IQAC) இணைந்த நடத்தி இந்த நிகழ்ச்சி கல்வியிலும் அன்றாட வாழ்விலும் கணிதத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் முதன்மை நோக்கமாக இருந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா […]

Loading

செய்திகள் முழு தகவல்

இறந்தவர்கள் வந்து இனி ஓட்டுபோட முடியாதே என பயம் வந்துவிட்டது எடப்பாடி பேட்டி

சேலம், டிச. 22: எஸ்.ஐ.ஆரை பார்த்து ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார், கதறுகிறார் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணியில் இணையலாம்” என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் எம்.எல்.ஏ. திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும்போது கூறியதாவது:– […]

Loading

செய்திகள்

த.வெ.க. சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பாதரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார். மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

மதுரை, டிச. 22: திருப்பரங்குன்றத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பொதுமக்கள் உள்பட 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் நேற்று கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு குடியிருப்பு வாசிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் […]

Loading

செய்திகள் முழு தகவல்

‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித் தன்மை ஆய்வு துவங்கியது

சென்னை, டிச. 22: முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை இன்று ‘ரிமோட்’ நீர்மூழ்கிக் கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம் கம்பத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நெல்சாகுபடி நடக்கிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பதுடன், பாசனத்திற்கு போக உபரியாக வைகை அணைக்கு திறக்கப்படும் நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய பணிகளும் நடக்கிறது. […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ‘மதி உணவுத் திருவிழா’: உதயநிதி துவக்கினார்

சென்னை, டிச. 22: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார். உணவுத் திருவிழாவில், 235–க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், […]

Loading

செய்திகள்

‘நட்சத்திர கிரிக்கெட் போட்டி’ சென்னை அணி : ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா இணைந்து வாங்கினார்கள்

சென்னை, டிச. 22: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை அணியை தயாரிப்பாளருமான வேல்ஸ் கல்விக் குழும தலைவருமான ஐசரி கணேஷ், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் இணைந்து வாங்கினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ (சி.சி.எல்.) என்ற கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 16-ந்தேதி தொடங்குகிறது. சென்னை அணிக்கு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர் ஆர்யாவை கேப்டனாக […]

Loading

செய்திகள்

ரூ.22 கோடியில் காவல்துறையில் கட்டிடங்கள் 9 புதிய காவல் நிலையங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, டிச. 22: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி […]

Loading

செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

“கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் – 2025’ விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் சித்தராமையா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய சித்தராமையா, “காங்கிரஸ் அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும், […]

Loading

செய்திகள்

இந்தோனேசியாவில் பஸ் விபத்து 16 பயணிகள் பலி

ஜகார்த்தா, டிச. 22: இந்தோனேசியாவில் பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் நேற்று நள்ளிரவு சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச்சுவர் மீது பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் […]

Loading