செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 அதிகம்

சென்னை, ஜன. 23– சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு […]

Loading

செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் 1,323 மாணவர்களுக்கு பட்டங்கள்: கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்

சென்னை, ஜன.23- சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 1,323 மாணவ–மாணவியருக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், இஸ்ரோவின் புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், பிரம்மோஸின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான பேராசிரியர் ஏ.சிவதாணுபிள்ளை பங்கேற்றார். நிகழ்ச்சியில் சிவதாணுபிள்ளை பேசியதாவது:- விஞ்ஞானிகள், தலைவர்கள், என்ஜினீயர்கள், கலைஞர்களை உருவாக்குவதில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் பட்டப்படிப்பை […]

Loading

செய்திகள்

வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடக்கம்

சென்னை, ஜன.23- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர். சென்னையில் கடற்கரை–வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி, ஜன. 23– ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. கடுமையான நிதிச்சுமை, இழப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டியும் முதலீட்டை விலக்குதல் கொள்கையை பின்பற்றி மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஏர் இந்தியாவை விற்பதாக அறிவித்தது. இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர நிறுவனங்களான அம்பானி, அதானி, டாடா குழுமம் உள்ளிட்டவை ஏலத்தில் போட்டாபோட்டி போட்டன. […]

Loading

செய்திகள்

அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கம்: ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 23– அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜவை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். அண்ணா தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘கழகத்தின் கொள்கை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,720 குறைந்தது: சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை

சென்னை, ஜன. 22– சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 13ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் […]

Loading

செய்திகள்

நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

நெல்லூர், ஜன. 22– ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் இருந்து ஐதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நந்தியால் மாவட்டம் சிரிவெள்ளமெட்டா அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்றபோது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தின் போது பேருந்தில் 36 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது. […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து அண்ணா தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

சென்னை, ஜன. 22– தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்த நிலையில் கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அண்ணா திமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டனர். மேலும் இதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நேரமில்லா […]

Loading

செய்திகள்

தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவோம்: எடப்பாடி – பியூஷ்கோயல் உறுதி

சென்னை, ஜன. 22– அ.தி.மு.க. – பா.ஜ.க. வலுவான கூட்டணி; தமிழகத்தில் ஊழல் தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று பியூஸ் கோயல், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்தில், இன்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்து அளிக்கப்பட்டது. இதில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கேற்றனர். […]

Loading

செய்திகள்

ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல்-–கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்தும் மாநில வள மையம்: அன்பில் மகேஷ் திறந்தார்

சென்னை, ஜன.22- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியுதவியுடன் மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். அப்போது பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் உடன் இருந்தார். புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளர்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன யுக்திகளை பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் […]

Loading