செய்திகள்

அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை

சென்னை, ஜன. 3– சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் அண்ணா தி.மு.க. தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை அண்ணா தி.மு.க. பொதுச் […]

Loading

செய்திகள்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன. 3: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட பயன்கள் கிடைக்கும் வகையில், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்’ என்னும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது உட்பட […]

Loading

செய்திகள்

129 தீயணைப்புத்துறை அலுவலர்கள், 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை

சென்னை, ஜன. 3: சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள், என மொத்தம் 750 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், அமைதிப் பூங்கா என்று இந்திய அளவில் எல்லோரும் சொல்கிறார்கள்; […]

Loading

செய்திகள் முழு தகவல்

பொங்கல் பண்டிகை கூடுதல் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு: நாளை டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

சென்னை, டிச. 3: பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்; 06012) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் […]

Loading

செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் 17 முடிவுற்ற பணிகளைத் துவக்கினார்

சென்னை, ஜன. 3: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். 15 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் […]

Loading

செய்திகள்

பட்டு – பருத்தியில் 13 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது : ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜன. 3: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-–2025–ம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 8 விருதாளர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 2 விருதாளர்களுக்கு 1.50 இலட்சம் ரூபாயும், சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாயும், என […]

Loading

செய்திகள்

ஐ.ஐ.டி., ஹைதராபாத் மாணவருக்கு நெதர்லாந்து பங்குச்சந்தை நிறுவனத்தில் வேலை

ஹைதராபாத், ஜன. 3: தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் எட்வர்ட் நாதன் வர்கீஸ், 21, என்ற மாணவருக்கு, ஆண்டுக்கு 2.50 கோடி ரூபாய் சம்பளத்துடன் நெதர்லாந்து நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஆர்வம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உயர் கல்வியில் சேர மாணவர்களின் முதல் தேர்வாக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் எனப்படும் ஐ.ஐ.டி., உள்ளது. இதன் கிளை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிலும் உள்ளது. ஹைதராபாதைச் […]

Loading

சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தின் 173-வது படம்: டைரக்டர் சிபி சக்கரவர்த்தி

சென்னை, ஜன. 3: கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிக்க திரைப்படம் தயாரிக்கிறார் அல்லவா? இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர், இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் சுந்தர்.சி, இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படத்தை இயக்குவதில் இருந்து சுந்தர் சி விலகி விட்டார். சுந்தர் சி விலகலுக்கு […]

Loading

செய்திகள்

பிரேசிலில் லாரி மீது பஸ் மோதல்: 11 பேர் பரிதாப பலி , 7 பேர் காயம்

பிரேசிலியா, ஜன. 3: பிரேசிலில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பஸ் ஒன்று நிலை தடுமாறி, அந்த வழியாக எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமுற்றனர். விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் மின்னணு உற்பத்தி திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, ஜன. 3: தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ரூ.41 ஆயிரத்து 863 கோடி மதிப்புள்ள மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு பொருட்கள் உற்பத்தி தொடர்பான ரூ.12 ஆயிரத்து 704 கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ரூ.41 ஆயிரத்து 863 கோடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் 22 மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான […]

Loading