செய்திகள்

வேலூர் கருங்காலி ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் உமா ஆய்வு

வேலூர், ஜன. 4: வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளர் உமா அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்காலி ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.57,26,000 மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு, சாலையின் நீளம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை மதிப்பீட்டில் உள்ளதா என அளந்து பார்த்து ஆய்வு செய்தார். கண்காணிப்பு அலுவலர் ச. உமா அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், வேலூர் மாநகராட்சி, திருவலம் பகுதிகளில் சாலைபணிகள் மற்றும் […]

Loading

செய்திகள்

சித்த மருத்துவ மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 4: புற்றுநோய் போன்றவற்றுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு இருப்பதால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ‘குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இளம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி கூறினார். சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஆயுஷ் […]

Loading

செய்திகள்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு 9-ந் தேதி நேர்காணல்

சென்னை, ஜன. 4: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடக்கிறது. இது தொடர்பாக அண்ணா தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத்தேர்தல்களில், அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகம் […]

Loading

செய்திகள்

பிரிமியம் செலுத்தாத காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்கலாம்

புதுடெல்லி, ஜன.4– இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், தனிநபர் காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிப்பதற்காக 2 மாத கால சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 1 தொடங்கிய இந்த பாலிசி புதுப்பிப்பு திட்டம் வரும் மார்ச் 2ம் தேதி வரையில் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா 50-வது ஜெயந்தி விழா: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை

வேலூர், ஜன. 4: ஸ்ரீபுரத்தை உருவாக்கி, தங்ககோயிலை உலகிற்கு வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50–வது ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொன்விழா ஜெயந்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சக்தி அம்மாவுக்கு மறியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். அரியூர் மலைக்கோடியில், ஸ்ரீ சக்தி அம்மா தன் தவ வலிமையால் நாராயணி பீடத்தை ஏற்படுத்தி நாராயணிக்கு கோயில் கட்டி சிறப்பித்தார். இந்த நிலையில், தெய்வத்தின் கட்டளையினால் சக்தி அம்மா தெய்வத்தின் […]

Loading

செய்திகள் விழாக்கள்

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் துவக்கினார்

தஞ்சாவூர், ஜன. 4: திரு​வை​யாறில் தியாக​ராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழாவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு தியாகர […]

Loading

செய்திகள்

கல்பட்டு கிராமத்தில் சோழர் கால கல்வெட்டு, விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், ஜன. 4: கல்பட்டு கிராமத்தில் சோழர் கால கல்வெட்டு, விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ளது கல்பட்டு கிராமம். இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், பிடாகம் தமிழழகன், கல்லூரி மாணவர் சித்தார்த்தன் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சோழர் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் கூறியதாவது:- கல்பட்டு சனீஸ்வரன் கோவில் வளாகத்தில் வெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட […]

Loading

செய்திகள்

ஏ.சி. மின்சார ரெயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை, ஜன. 4: ஏ.சி.மின்சார ரெயில் சேவை நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 3 ஏ.சி.மின்சார ரெயில் சேவைகளுக்கு நேரம் மாற்றப்பட்டுள்ளது. 4 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இது நாளை (5-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:- * சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ஏ.சி.மின்சார ரெயில் […]

Loading

செய்திகள்

வேலு நாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, ஜன. 3: ‘‘இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர் வேலுநாச்சியார்’’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இது குறித்து மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவு கூரப்படுகிறார். காலனித்துவ […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

சென்னை, ஜன. 3: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. […]

Loading