செய்திகள்

மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றினார் கவர்னர்

சென்னை, ஜன. 26– நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த கோலாகல விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். காரின் முன்னும் பின்னும் […]

Loading

செய்திகள்

டெல்லியில் 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி திரவுபதி

புதுடெல்லி, ஜன. 26– இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றினார். இவ்விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார். டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் வீரர்கள் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, ஜன. 26– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டுக் கொண்டு உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் விலை ஏற்றம் கண்டு வருகிறது.நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு […]

Loading

செய்திகள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, ஜன. 26– டெல்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார். போரின்போது நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூறும் வகையில், 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் வரவேற்றனர். போர் வீரர்களின் நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். […]

Loading

செய்திகள்

நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டோம்

மதுராந்தகம், ஜனவரி 24: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். கடந்த கருத்து வேறுபாடுகளை மறந்து இனி ஒன்றாக செயல்படுகிறோம். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, சீரழிவு நிறைந்த நிர்வாகத்திற்கு முடிவு காணும் […]

Loading

செய்திகள்

சட்டசபையில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை

சென்னை, ஜன. 24– சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இன்று காலை 9.30 மணிக்கு சபை கூடியது. மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் எஸ். காந்திராஜன் சமர்ப்பித்தார். அதே போல் அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் தி.வேல்முருகன் சமர்ப்பித்தார். பின்னர் அரசினர் சட்டமுன் வடிவுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Loading

செய்திகள்

திருவனந்தபுரம் – தாம்பரம் உட்பட 3 ‘‘அம்ருத் பாரத்’’ ரெயில்கள்: மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஜன. 23– கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அம்ருத் பாரத் ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) முதன் முறையாக கைப்பற்றியது. அந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து 45 நாட்களுக்குள் பிரதமர் மோடி கேரளா வருவார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மோடி இன்று கேரளாவுக்கு வந்தார். அவர் டெல்லியில் இருந்து தனி […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் […]

Loading

செய்திகள்

பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பாமலே இருப்பதா? தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன.23– ‘‘தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 50% ஆசிரியர் காலி பணியிடங்கள், ஆசிரியர்களை நியமிக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழ்நாட்டில் உள்ள 21 மாநில பல்கலைக்கழகங்களில் சுமார் 50% முதல் 65% வரை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. […]

Loading

செய்திகள்

சிக்கலான சிகிச்சையில் 1000 நோயாளிகளுக்கு மறுவாழ்வு: அப்போலோ நிபுணர்கள் குழு சாதனை

சென்னை, ஜன 23– சென்னை அப்போலோ மருத்துவமனை, இருதயம் மற்றும் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் தேசிய அளவில் முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகள், 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, 250-க்கும் மேற்பட்ட செயற்கை இருதய பம்ப் (LVAD) சிகிச்சைகள், 250-க்கும் மேற்பட்ட நுரையீரல் ரத்த உறைவு நீக்க சிகிச்சைகளை, இம்மருத்துவமனையின் அனுபவமிக்க உறுப்புமாற்று சிகிச்சை குழு வெற்றிகரமாக […]

Loading