செய்திகள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது

சென்னை, ஜன. 6: தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி வலுப் பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொழியவில்லை. கடும் பனி நிறைந்த மாதமாகவே டிசம்பர் இருந்தது. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் துன்பம் அடைந்துள்ளனர்: வெனிசுலா இடைக்கால அதிபர் காட்டம்

கராகஸ், ஜன. 6– வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் துன்பம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (63) மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் (69) ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார். துப்பாக்கிச்சூடு இதனிடையே வெனிசுலாவின் கராகசில் துப்பாக்கிச்சூடு […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி, ஜன. 6: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நுரையீரல் […]

Loading

செய்திகள்

இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமான்: மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன. 6: இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர். ரகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய பிறந்தநாள் […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்

புனே, ஜன. 6– காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (வயது 81) இன்று காலமானார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரான கல்மாடி, புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் காலமானதாக அவரது அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தினர். சுரேஷ் கல்மாடியின் உடல் புனேவின் எரண்ட்வானேயில் உள்ள அவரது வீட்டில் பிற்பகல் […]

Loading

செய்திகள்

சென்னையில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அறிமுகம்

சென்னை, ஜன. 6: சென்னையில் இன்று முதல் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. […]

Loading

செய்திகள்

10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.6- ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில், கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வித்துறை சார்பில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற தலைப்பில் 10 லட்சம் மடிக்கணினிகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை […]

Loading

செய்திகள்

கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

கடலூர், ஜன. 6: கடலூர் மாவட்டம் திருவந்திபுரம், கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி பயிலவும், தொடக்கப்பள்ளிகளில் காலை […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி: ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை, ஜன. 6: இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ம் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க. உட்பட பல்வேறு கட்சியினர் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்

சேலம், ஜன. 5: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தி.மு.க., அ.ம.மு.க., கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (4–ந் தேதி), ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், தி.மு.க-வைச் சேர்ந்த, வி.சி. வரதராஜ் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினர் வி.பி. முத்துசாமி, […]

Loading