செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

புதுடெல்லி, ஜன. 12– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக […]

Loading

செய்திகள்

17 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த ‘‘பி.எஸ்.எல்.வி. சி–62 ராக்கெட் திட்டம் தோல்வி’’: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12– ‘‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி–62 (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதால், தோல்வி அடைந்ததாக’’ ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்–1 என்ற செயற்கைக்கோளுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோளை சுமந்தப்படி பி.எஸ்.எல்.வி.–சி62 ராக்கெட் […]

Loading

செய்திகள்

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்சி, ஜன. 12– திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து […]

Loading

செய்திகள்

உத்திரமேரூரில் அண்ணா திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநிநோயகம்

காஞ்சிபுரம் ஜன. 12– காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் உத்திரமேரூர் பஜாரில் தொழில் நிறுவனங்கள் , சிறு கடைகள் , வியாபாரிகள் , பொதுமக்கள் ஆகியோரிடம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் […]

Loading

செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணங்களை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜன.12– பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக […]

Loading

செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பதிலடி

சென்னை, ஜன. 12– ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது அவருடைய சொந்த கருத்து. ஆனால் கூட்டணி அதிகாரம் முடிவு எடுப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து […]

Loading

செய்திகள்

இந்தியாவின் வலிமையைக் காட்டும் சோம்நாத் கோவில் கொடி: மோடி பெருமிதம்

ஆமதாபாத், ஜன. 11: சோம்நாத் கோவிலில் பறக்கும் கொடி இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது 1026–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி, ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார். அதன் பின், முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை கோவில் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் சோம்நாத் […]

Loading

செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு

வாஷிங்டன், ஜன. 11: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் ஹாவ்க்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அங்கு, ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. அண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போது அமெரிக்க பாதுகாப்பு படையினர் இருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். […]

Loading

செய்திகள்

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை, ஜன. 11: தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு முழுவதும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் பணிபுரிவதாகவும்; அலுவலகப் பணி, களப் பணி, தேர்தல் பணி என அனைத்துப் பணிகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருவதாகவும்; வருவாய்த் துறையில் பணிபுரியும் […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வு

சென்னை, ஜன. 11: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு ‘டிக்கெட்’ கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது. ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக […]

Loading