செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநிலத்தில் எங்கும் அனுமதிக்க மாட்டோம்: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை, ஆக.25-– ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மாநில சூற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, ராமநாதபுரம், திருவாடானை, கீழக்கரை ஆகிய தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் அடையாளம் […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி மனு

தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஆக. 4– பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் […]

Loading

செய்திகள்

நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூலை 27– நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டுள்ள தெருநாய்களை கருணைக் கொலை செய்ய மாநில அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகளும் பிரச்னைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சாலை விபத்துகள், ரேபிஸ் தொற்று […]

Loading

செய்திகள்

“தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது”

தமிழக அரசு பெருமிதம் சென்னை, ஜூலை.23- தனிநபர் வருமானத்தில் 2வது இடம் பெற்ற தகவல் வெளியன நிலையில், தமிழ்நாடு அடைந்து வரும் வளர்ச்சி, சாதனைகளை எவராலும் மறைக்க முடியாது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2024–2025ம் ஆண்டில் 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. […]

Loading

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஜூலை.23- சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 29). பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின்பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

சென்னை, ஜூலை 13– பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், ‘கடைசி பெஞ்ச்’ என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக, அம்மாநிலத்தில், ஒரு சில […]

Loading

செய்திகள்

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

சென்னை, ஜூலை.1- தமிழ்நாட்டில் உள்ள பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், வீடு, சிறு வணிகர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், […]

Loading