சென்னை, ஜன. 23– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி முருகன் மறைவுக்கு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜம்மு காஷ்மீர் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த பேரவைத் தலைவர் […]
![]()






