செய்திகள்

தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு: 14 ஆயிரம் புதிய வேலைவாய்ப்பு

சென்னை, அக்.14– தைவான் நாட்டை சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசிடம் நேற்று உறுதி அளித்துள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில், அதிகளவில் முதலீடு செய்வதால், விரைவாக ஒப்புதல் அளிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, அமெரிக்காவின், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன்’ பாகங்களை ஒருங்கிணைத்து, பல நாடுகளுக்கு போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, பாக்ஸ்கான் […]

Loading

செய்திகள்

ஐகோர்ட் உத்தரவுபடி கரூரில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது

கரூர், அக். 4– கரூர் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் இன்று கரூரில் விசாரணையை துவக்கினார்கள். அவர்களிடம் இதுசம்பந்தமாக ஆவணங்களை கரூர் போலீசார் ஒப்படைத்தனர். கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இதைத் தொடரந்து சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை […]

Loading

செய்திகள்

மயிலை புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில்

சென்னை, ஆக 26– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் […]

Loading

செய்திகள்

தூய்மைப் பணியாளர்களுக்கு 6 புதிய திட்டங்கள் அறிவிப்பு

சென்னை, ஆக. 14– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். முன்னதாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அண்ணாதி.மு.க., மார்க்சிஸ்ட், தே.மு.தி.க., த.வெ.க. […]

Loading

செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஆக. 7– ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்தது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு, நீதிபதிகள் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர். தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை, செய்தி ஊடகங்கள் வாயிலாக, சரியான நேரத்தில், பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோரை, அரசின் […]

Loading

செய்திகள்

உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20,000 மானியம்

சென்னை, ஆக. 6– தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e–scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க இந்த மானியம் வழங்கப்படுகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம். […]

Loading

செய்திகள்

தண்ணீர் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறிய 5000 பேர்: ஒருவர் மட்டும் வசிக்கும் அவலம்

சென்னை, ஆக. 5– 5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்னை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டும் எஞ்சியிருப்பதாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது; ஒரு காலத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது ஒரு பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே எஞ்சியுள்ளது. முதல்வர் […]

Loading

செய்திகள்

தேனாம்பேட்டை அப்போலோவில் பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ திரும்பினார்

சென்னை, ஜூலை 22– அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள […]

Loading