செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு

சென்னை, ஜன.19-– தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தீவிர முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக, வரும் 21 ம் தேதி சென்னை வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அ.தி.மு.க., பா.ஜ.க., […]

Loading

செய்திகள்

‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி டெல்லிக்குச் சென்றது ஏன்?’’ டிடிவி தினகரன் கேள்வி

சென்னை, செப். 16 – ‘‘தன்மானம்தான் முக்கியம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றது ஏன்? என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டிடிவி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நன்றி மறப்பது நன்றன்று என எடப்பாடி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியைப் பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாத அவர் பேசுகிறார். அண்ணா திமுகவை […]

Loading

செய்திகள்

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

புதுடெல்லி, செப். 11– தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. செங்கோட்டையன், ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து […]

Loading

செய்திகள்

தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்

தஞ்சாவூர், செப். 5– அண்ணா தி.மு.க. தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அண்ணாதி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சியை கொண்டுவர முடியும். இல்லையென்றால் முடியாது என்று தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இரண்டு பேரின் நல்ல […]

Loading

செய்திகள்

வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

நெல்லை, ஆக. 23– அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கைவிட்ட தி.மு.க. அரசு

குற்றாலம், ஆக. 6– அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். தென்காசி மாவட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் விடுதியில் தங்கிய அவர் முதல்கட்டமாக மாற்றத்திறனாளிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று […]

Loading

செய்திகள்

ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதா விஜயகாந்த், ஓ.பி.எஸ்.

சென்னை, ஜூலை 31– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், 3 நாட்கள் டாக்டர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த்தை […]

Loading

செய்திகள்

காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை, ஜூலை.30- அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீபாவளியின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும், காவிரி–குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை முன்பு திரண்ட தொண்டர்கள், மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், கட்டப்பஞ்சாயத்து, சட்டம்–ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், போதையின் பாதையில் […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி

சென்னை, ஜூலை 26– திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 10.45-க்கு சந்தித்து பேசுகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு 7.50க்கு தூத்துக்குடி வருகிறார். பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார்.இந்த விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு இன்று […]

Loading

செய்திகள்

குடும்ப அரசியலை விமர்சித்த நான் தற்போது வாரிசு அரசியல் பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன்’’: வைகோ புலம்பல்

விழுப்புரம், ஜூலை 18– குடும்ப அரசியலை விமர்சித்த நான், தற்போது வாரிசு அரசியல் என்ற பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் என, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசினார். விழுப்புரம், ஆனந்தா மண்டபத்தில் ம.தி.மு.க., மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நேற்று இரவு நடந்தது. அக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தின் முக்கிய அரசியல் கால கட்டங்களில் ம.தி.மு.க., செத்துவிட்டதென ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதங்கள் நடக்கிறது. ஆனால், கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதனை பொய்யாக்கி, 31 ஆண்டுகளாக காத்து […]

Loading