செய்திகள்

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு

பெர்லின், டிச. 23– அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உள்ளிட்டவைகளை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் குற்றம்சாட்டி பேசியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு முன்னதாகவே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை பா.ஜ.க.வினர் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 15ம் தேதி பெர்லின் நகருக்குச் சென்ற ராகுல் காந்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சந்தித்து […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு: ஸ்டாலின் பேச்சு

சென்னை, செப்.2– இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஜெர்மனியில் 1–ந் தேதி அன்று நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகவும், நவீன உற்பத்தி, […]

Loading

செய்திகள்

7 நாள் அரசு முறைப் பயணம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு புறப்பட்டார் ஸ்டாலின்

சென்னை, ஆக.30– தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக 7 நாள் அரசு முறைப்பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக அவர் இன்று சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். ‘எந்த ஒரு சதியையும் முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு’ என்று அப்போது ஒரு கேள்விக்கான பதிலில் கூறினார். நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:– ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் இன்று […]

Loading

செய்திகள்

பயணிகள் விமானத்தில் தீ: 40 நிமிடங்கள் பறந்து பத்திரமாக தரையிறங்கியது.

ஏதென்ஸ், ஆக. 19– கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை 40 நிமிடங்கள் இயக்கி பத்திரமாக தரையிறக்கினர் விமானி. கிரீஸ் நாட்டின் கோர்பு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் நகருக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதில் 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில […]

Loading

செய்திகள்

ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு 3 பேர் பலி; 34 பேர் படுகாயம்

பெர்லின், ஜூலை 28– ஜெர்மனியில் ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பேடன்-வ்ரெட்டம்பேர்க்கில் 100க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 34 பேர் […]

Loading