சென்னை, நவ. 24: சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 77 ஆயிரத்து 707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நேற்றுடன் (23–ந் தேதி) செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட […]
![]()


