செய்திகள்

பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 வடமாநில ஆசாமிகள் கைது

ஆவடி, செப். 16– பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில ஆசாமிகள் 3 பேரை கைது செய்தனர். பூந்தமல்லி பைபாஸ் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் 3 பேர் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடம் சென்று […]

Loading

செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்திய மத்திய அரசுக்கு நன்றி: ஜிஎஸ்டி மாற்றம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

மதுரை, செப். 4– 8 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:– இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய தவறை உணர்ந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த சட்டத்தை அமல்படுத்தியபோது இது தவறு, இது போன்ற பல்வேறு வரிவிகிதங்களை வைக்காதீர்கள் என்று அப்போதே நாங்கள் […]

Loading

செய்திகள்

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம்: 2 அடுக்குகளில் மட்டுமே வரி

புதுடெல்லி, செப்.4-– டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இதில் இனி 2 அடுக்குகளில் மட்டுமே வரி விதிக்கவும், வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி […]

Loading

செய்திகள்

3 ஆயிரம் கோடி கடன் மோசடி : அமுலாக்கத் துறை பிடியில் சிக்கிய அனில் அம்பானி

புதுடெல்லி, ஜூலை 24– கடன்பெற்று திரும்ப செலுத்தாததால், ‘‘மோசடியாளர்’’ என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கும் நிலையில், ரிலையன்ஸ் அனில் அம்பானி வீடு, நிறுவனங்களில் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை. இதுதொடர்பாகவும், வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக […]

Loading

செய்திகள்

வடகொரியாவுடன் செயல்பாடுகளிலும் உறுதியான உறவு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

மாஸ்கோ, ஜூலை 11– ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வடகொரியாவுக்கு 2 நாள் பயணமாகச் செல்கிறார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வடகொரியாவுக்குப் புறப்படும் முன், மலேசியாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, கடந்த ஜூன் 17 ந்தேதி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்தார். வடகொரியாவுடன் உறவு உறுதி அப்போது, ரஷ்யா-வடகொரியா […]

Loading

செய்திகள்

அரியானாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை

குருகிராம், ஜூலை 11– வளர்ந்து வரும் பிரபல இளம் டென்னிஸ் வீராங்கனையான தன் மகளை தந்தையே துப்பாக்கியால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் பெற்ற மகளின் வளர்ச்சி, பெருமை கண்டு பொறுக்கமாட்டாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க, 25 வயது மகள் ராதிகாவை 51 வயது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவம் அரியானா குருகிராமம் பகுதியில் நேற்றிரவு (வியாழன்) 10.30 மணியளவில் நடந்துள்ளது. இது […]

Loading

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
செய்திகள்

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 11– தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் வழியில் பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் […]

Loading

செய்திகள்

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்: ஆர். எஸ். எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

நாக்பூர், ஜூலை 11– 75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து பிரதமர் மோடிக்கு பொருந்தக்கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் […]

Loading