செய்திகள்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மதுரை, ஆக. 20– நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஜூன் 27–ந் தேதி வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த நகை திருடு போனது. இது தொடர்பான மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் ஜூன் 28–ந் தேதி […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை .. கூவாகம் திருவிழா …!விழா 39 …. ராஜா செல்லமுத்து

“உங்க வீட்ல அமுதன் ரொம்ப கெட்டிக்காரப் பையன். நல்லா படிக்கிறான். நல்லா பாடுறான். நல்லா ஆடுறான். அவனுக்கு இருக்கக்கூடிய திறமை உங்க வீட்ல யாருக்குமே இல்லை” என்றுஅமுதனைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார், ஆண்டவர். “நீங்க சொல்றது சரிதான். எங்க வீட்டில் இருக்கிற மத்த பிள்ளைகளை விட அமுதன் கொஞ்சம் கெட்டிக்காரப் பையன்தான். அவனுக்கு சின்ன வயசுல இருந்தே படிப்புமேல, டான்ஸ் மேல, அலாதி விருப்பம். நாங்களும் அவனுக்கு எந்த தடையும் சொல்றது இல்ல. அவன் மனசுக்கு […]

Loading

செய்திகள்

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி

விருத்தாசலம், ஆக. 20– விருத்தாசலம் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 6 இளைஞர்களும் காரில் வேப்பூர் நோக்கி சென்றுள்ளனர். கார் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த எருமனூர் […]

Loading

செய்திகள்

தவெக மாநாட்டு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக. 20– ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டுக்கு பேனர் வைக்க முயன்ற போது கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார். நடிகர் விஜயின் தவெக 2வது மாநாடு மதுரை அருகே உள்ள பாரபத்தி பகுதியில் நாளை நடக்கிறது. இதற்காக அங்கு 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை இருக்கைகள், மின் விளக்குகள், பந்தல் அலங்கார பணிகள் முழு வீச்சில நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் […]

Loading

செய்திகள்

சென்னை, திண்டுக்கல், தென்காசி உள்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை

திண்டுக்கல், ஆக. 20– திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ஆவார். மதமாற்றம் தொடர்பான மோதலில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது […]

Loading

செய்திகள்

‘ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு’’: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன், ஆக. 20– ‘‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக’’ வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார். இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் […]

Loading

செய்திகள்

‘இந்தியா’ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மிகச்சரியான தேர்வு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக.20-– ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியை அறிவித்திருப்பது மிகச்சரியான தேர்வு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ‘இந்தியா’ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஆக. 20– சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை .. காத்தாடித் திருவிழா..!விழா 38 …. ராஜா செல்லமுத்து

நீலவான் வெளியில் நீண்ட வால் முளைத்த விண்மீன்களாய் பறந்து கொண்டிருந்தன, வண்ண வண்ணக் காத்தாடிகள். பறக்கும் அத்தனை வண்ணங்களிலும் சுரேந்திரனின் நீல வண்ணக் காத்தாடி மட்டும் வானிலேயே நிலை கொண்டிருந்தது. “அந்த நீல நிறக் காத்தாடி தான் ரொம்ப தூரத்தில பறந்திட்டு இருக்கு. நிச்சயமா அதுதான் ஜெயிக்குமுன்னு நினைக்கிறேன்” என்று ஒரு பார்வையாளர் சொல்ல “இல்ல, அந்தச் சிவப்புக் கலர் காத்தாடியப் பாருங்க . அதுவும் ரொம்ப தூரத்தில பறந்திட்டுத் தான இருக்கு.” “இல்ல, அத விட […]

Loading

செய்திகள்

தாம்பரம் அருகே ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதி விபத்தில் மேலும் ஒருவர் பலி

சென்னை, ஆக. 18– தாம்பரம் அருகே இன்று அதிகாலை ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). இவர், ரேபிடோ நிறுவனத்தில் ‘பைக் – டாக்சி’ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் பால்ராஜ் தனது மோட்டார்சைக்கிளில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், தசாவர் நாயக்கர்பட்டியைச் சேர்ந்த […]

Loading