செய்திகள்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு சுனாமி எச்சரிக்கை

மாஸ்கோ, செப். 13– ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இருந்து கிழக்கே 111 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 8.03 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம், ரிக்டர் […]

Loading

செய்திகள்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு அவசர உதவி, மீட்டு வர நடவடிக்கை :

சென்னை, செப் 13– நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுடெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை […]

Loading

செய்திகள்

‘‘வாக்கு திருட்டுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினை’’: ராகுல் காந்தி ஆவேசம்

ஆமதாபாத், செப்.13- வாக்கு திருட்டுதான் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த பிரச்சினையை மையமாக வைத்து பீகாரில் அவர் வாக்காளர் உரிமை யாத்திரையையும் நடத்தினார். இதன் மூலம் வாக்கு […]

Loading

செய்திகள்

15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்

புதுடெல்லி, செப்.12– நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதனையடுத்து பதவியேற்பு விழா இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

Loading

செய்திகள்

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது

சென்னை, செப். 12– சென்னை கோயம்பேடு பணிமனையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதனப் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திருப்பதிக்கு செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் திருடிச் சென்றதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிமனை மேலாளர் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பேருந்தை […]

Loading

செய்திகள்

சிக்கிம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கேங்டாக், செப்.12– சிக்கிமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு சிக்கிம், யாங்தாங் தொகுதிக்குள்பட்ட ரிம்பி பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இடைவிடாத மழை இருந்தபோதிலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி, ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். […]

Loading

செய்திகள்

யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு செப்டம்பர் 15–ந்தேதி முதல் ரூ.10 லட்சமாக உயர்வு

சென்னை, செப்.12- யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Loading

செய்திகள்

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை வழக்கறிஞர் பாலு பேட்டி

சென்னை, செப். 11– அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை வழக்கறிஞர் பாலு கூறினார். பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பா.ம.க.வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு பாமகவை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது. […]

Loading

செய்திகள்

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

விழுப்புரம், செப். 11- பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 16 குற்றச்சாட்டகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ராமதாஸ் அனுப்பிய நோட்டீசை பெற்றுக்கொண்ட […]

Loading

செய்திகள்

தமிழக அரசின் பாராட்டு விழா: ராஜாவை தாலாட்டும் தென்றல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, செப்.11- “ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” பாராட்டு விழா இசையின் அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இளையராஜாவை வாழ்த்தி பேசுகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க […]

Loading