செய்திகள்

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, செப். 17– விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரச்சாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி […]

Loading

செய்திகள்

வாழ்க்கை வரலாற்றுப்படம்: பிரதமர் மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்

திருச்சூர், செப். 17– நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார். ’மா வந்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். “பிரதமர் மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக உள்ளது. அதுகுறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது. மோடியின் வாழ்க்கையை திரைப்படமாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘மா வந்தே’ என்று […]

Loading

செய்திகள்

பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 வடமாநில ஆசாமிகள் கைது

ஆவடி, செப். 16– பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில ஆசாமிகள் 3 பேரை கைது செய்தனர். பூந்தமல்லி பைபாஸ் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் 3 பேர் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடம் சென்று […]

Loading

செய்திகள்

மதுரை தொழிலதிபர் கொலை: பங்குதாரர் உள்பட 7 பேர் கைது

மதுரை, செப். 16– மதுரை தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி கொலை செய்த பங்குதாரர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று ரூ.82 ஆயிரத்தை கடந்தது

சென்னை, செப். 16– தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது […]

Loading

செய்திகள்

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி 108–வது பிறந்தநாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, செப் 16– விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 108–வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்ற சமூகநீதித் தலைவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணக்கம் செலுத்தினேன்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, செப்.16– சென்னையில் ஒரு மாதத்தில் 46 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரத்து 255 தெருநாய்களுக்கு முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2021 முதல் இதுவரை 1,34,674 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த்தடுப்பூசியும், 71,475 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

நிச்சயமாக பெரம்பலூருக்கு மீண்டும் வருவேன்: விஜய்

சென்னை, செப். 14– பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றிக்கழக வலைத்தள பக்கத்தில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி 16–ந்தேதி டெல்லி பயணம்

சென்னை, செப்.14– அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (16–ந்தேதி) டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிலையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார். அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் […]

Loading

செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்

சென்னை, செப்.14- அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசை​ஞானி இளைய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்தார். 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா, லண்டனில் தனது கனவு […]

Loading