செய்திகள்

பாரதி மகளிர் கல்லூரியில் நிறுவன மேலாண்மைக்குழு:

சென்னை, செப்.25– மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவுடன், சமூக உணர்வு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை கற்றறிய கல்லூரி தோறும் நிறுவன மேலாண்மைக்குழுவினை அமைத்திட ஏதுவாக சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை அரசு செயலாளர் பொ.சங்கர் தலைமை வகித்தார், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது:– இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டும் இல்லாமல், […]

Loading

செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுடெல்லி, செப்.25- தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நேற்று அளித்தது. இந்த ஒப்புதலின்படி மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தித்திறன் சார்ந்த போனசாக ரூ.1,865.68 கோடி வழங்கப்படுகிறது. இதில் தகுதியுள்ள ஒவ்வொரு ரெயில்வே […]

Loading

செய்திகள்

தரமணி பகுதியில் ஹெராயின் போதைப்பொருள்: 2 பேர்

சென்னை, செப். 24– சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த வடமாநில ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தரமணி தபால் நிலையம் எதிரில் கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் ஹெராயின் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது அதன்பேரில், தரமணி காவல் நிலையத்தில் […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: டிடிவி தினகரன் உறுதி

சென்னை, செப். 24– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் […]

Loading

சினிமா செய்திகள்

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், சாய்பல்லவி, லிங்குசாமி, அனிருத்துக்கு ‘‘கலைமாமணி’’ விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, செப் 24– நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், நடிகை சாய்பல்லவி, டைரக்டர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு ‘‘கலைமாமணி’’ விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல நாடகத்துறையில் காரைக்குடி நாராயணன், பூச்சி முருகனுக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷன் கே.ஜே. யேசுதாசுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது. கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் விழா நடைபெறும். இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, செப். 24– சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. பெரும்பாலும் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.சென்னை ஐகோர்ட், ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை, செப். 24– உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Loading

செய்திகள்

நடிகர் மம்மூட்டி, பிருத்விராஜ் உள்பட மலையாள நடிகர்கள் வீட்டில் சுங்கத்துறை சோதனை

கொச்சி, செப். 23– பூட்டான் வழியாக முறைகேடாக சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்த புகாரில் மலையாள நடிகர்கள் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான், பிருத்விராஜ் ஆகியோர் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ். பிருத்விராஜ் நடிப்பு தாண்டி படங்கள் தயாரித்தும், இயக்கியும் வருகிறார். பிறமொழிகளிலும் நடிக்கிறார். அதேப்போல் நடிகர் மம்முட்டி மலையாள திரையுலகின் முன்னணி நடிகராகவும். உள்ளார். அவரது மகனான […]

Loading

செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே? ஸ்டாலின் கேள்வி

சென்னை, செப். 23– 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாமே என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீர்திருத்தம் நாடு முழுவதும் நேற்று அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள், டி.வி, ஏசி, கார்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை என சுமாா் 375 பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு தொடர்பாக முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியது

சென்னை, செப். 23– தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக, ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால், தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து […]

Loading