செய்திகள்

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, அக். 7– தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் […]

Loading

செய்திகள்

சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் ரூ. 1.27 கோடி மீட்பு

சென்னை, அக். 7– சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,27,48,074 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பொதுமக்களின் புகார்களை 1930 என்ற அவசர அழைப்பு மூலமாக அல்லது நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை மீட்டு தர […]

Loading

செய்திகள்

சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா: 4 பேர் கைது

சென்னை, அக். 5– சென்னை சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 4 பேரை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல்குழுவினருக்கு […]

Loading

செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகளின் இறப்புக்கு காரணமான இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது

போபால், அக். 5– மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருமல் மருந்தைப் பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் சிந்த்வாராவில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் குழந்தைகள் சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறிய நிலையில், அக்டோபர் 3ம் தேதி வரையில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் பாராசியாசில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் […]

Loading

செய்திகள்

மதுரையில் வீடு இடிந்து மூதாட்டி பலி

மதுரை, அக். 5– மதுரையில் 3 மாடி வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெமீலா (வயது 60). இரு பேரக்குழந்தைகளுடன் மதுரை வந்தார். கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அண்ணாநகர் யாகப்பா நகர் சக்திமாரியம்மன் கோயில் அருகே உள்ள சகோதரர் வீட்டிற்கு நேற்று மாலை ஆட்டோவில் வந்தார். அப்போது சகோதரர் வீட்டின் எதிரே பழமையான 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய ஜெமீலா மீது […]

Loading

செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு

சென்னை, அக். 5– கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை நியமித்த வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட […]

Loading

செய்திகள்

இமயமலைப் பயணத்தில் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, அக்.5– நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் – 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து […]

Loading

செய்திகள்

நாமக்கல்லில் எடப்பாடி பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு

சென்னை, அக்.4– வருகிற சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ந் தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் […]

Loading

செய்திகள்

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிப்போம்: ஸ்டாலின்

சென்னை, அக். 4– கரூர் சம்பவத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் நீண்ட கால தீர்வை நோக்கி பயணிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:– கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து […]

Loading

செய்திகள்

கனிமொழி எம்.பி. வீடு, இஸ்கான் கோவில், சென்னை விமான நிலையம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, அக். 4– சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு, இஸ்கான் கோவில், விமான நிலையம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, கவர்னர் மாளிகை, விமான நிலையம், பள்ளி, கல்லூரிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமான நட்சத்திரங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து […]

Loading