செய்திகள்

‘‘ரஷ்ய எண்ணெயை நிறுத்துகிறோம்’’ என்று மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் பேட்டி: இந்திய அரசு உடனடியாக மறுப்பு

புதுடெல்லி, அக். 16– ‘‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக கடுமையான மறுப்பைத் தெரிவித்துள்ளது. “இந்தியா பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்களின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. எங்களின் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தில் முழுமையாக வழி நடத்தப்படுகின்றன” என்று அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் […]

Loading

செய்திகள்

பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு; சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர், அக். 16– சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்ட நிலையில், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூரில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, […]

Loading

செய்திகள்

பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி முன்னாள் மாணவர் சங்கக் கிளை திறப்பு

சென்னன, அக். 16– பொளாச்சி என்.ஜி.எம் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை மண்டல கினள துவக்க விழா சென்னையில் நனடபெற்றது. சங்கத்தின் தலைமைப் புரவலர், முனைவர். பி.கெ. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமை வகித்து, சங்கத்தின் விவரப் புத்தகத்தை வெளியிட்டு சிறப்ரையாற்றினார். இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைமை அதிகாரியுமான முனைவர் எஸ் பாலச்சந்திரன், சங்கத்தின் தொலைநோக்கு உரையை வழங்கினார். கர்னல் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சங்கத் தனலவர் மருத்துவர் […]

Loading

செய்திகள்

சட்டசபைக்கு ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க. எம்எம்ஏக்கள்

சென்னை, அக். 16– தமிழக சட்டசபைக்கு இன்று அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். தமிழக சட்டசபை கூட்டம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 2வது நாள் கூட்டத்திற்கு வந்த அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித் கருப்பு கையில் கைப்பட்டை அணிந்து வந்திருந்தனர். 3வது நாளான இன்று சட்டசபைக்கு அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘‘கிட்னிகள் ஜாக்கிரதை’’ என்று எழுதி இருந்த […]

Loading

செய்திகள்

சென்னை கொளத்தூரில் ரூ.111 கோடியில் துணை மின் நிலையம்: ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, அக்.16-– சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகரில் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் 230/33 கிலோ வாட் வளிம காப்பு துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. […]

Loading

செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடியில் ஹிட்டாச்சி நிறுவன விரிவாக்கத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்:

சென்னை, அக்.16- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 வருடங்களில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தை சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் […]

Loading

செய்திகள்

கரூர் சம்பவம்: முதலமைச்சர் – எடப்பாடி காரசார விவாதம்

சென்னை, அக். 15– தமிழக சட்டப்பேரவையில் இன்று கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. கடும் அமளியால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டபேரவைக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க.வினர் பின்னர் கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். கரூர் தவெக கூட்ட நெரிசல் பலி குறித்து தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்து பேசுகையில் […]

Loading

செய்திகள்

தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் வாங்க நடவடிக்கை

சென்னை, அக். 15– பேரிடர் மீட்பு பணிகளுக்காக தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்களை வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் கனரக வாகனங்களை உள்ளூர் கொள்முதல் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசு முன்வருமா எனவும் பஞ்சாபில் புயல் வந்த போது தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை தமிழகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க […]

Loading

செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

* மக்களின் உயிரே முக்கியம் * மக்களின் உயிரே விலை மதிப்பற்றது சென்னை, அக்.15– ‘மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிரே விலை மதிப்பற்றது. 41 பேரை பலி வாங்கிய கரூர் போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என உறுதி எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் அரசு செயல்படும்’ எனவும் அவர் உறுதியளித்தார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

வாஷிங்டன், அக். 15– அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளுடன் ரகசிய தொடர்புகள் வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின வியன்னா நகரில் வசித்து வருபவர் ஆஷ்லே டெல்லிஸ் (வயது 64). இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோத வகையில் […]

Loading