சென்னை, நவ. 6– சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸின்போது வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சங்கிலித் தொடர் விபத்தில், ரேஸ் பைக் ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பேகம் சாகிப் சாலையை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் சுகைல் மற்றும் செல்போன் கடை ஊழியர் சோயல் ஆகியோர் நேற்றிரவு ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். ராயப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கி […]
![]()










