செய்திகள்

ரூ.223 கோடியில் 577 திட்டங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, நவ. 10– புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.202 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 43 ஆயிரத்து 993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 […]

Loading

செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் விமான என்ஜினில் கோளாறு; கொல்கத்தாவில் அவசரமாக தரை இறக்கம்

கொல்கத்தா, நவ. 10– என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், கொல்கத்தாவில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து 188 பேருடன் மும்பையில் இருந்து நேற்று மாலை 7.10 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக விமானம் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் என்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த விமானி, […]

Loading

செய்திகள்

12,573 கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சென்னை, நவ 10– ஒன்றிய அரசு ஒதுக்கீட்டின் படி நியாய விலைக் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு முழுதும் 15–ந்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விடும். நடப்பாண்டு குறுவைப் பருவத்தில் வரலாற்றுச் சாதனையாக 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 1.75 லட்சம் நெல் விவசாயிகளுக்கு ரூ 3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி […]

Loading

செய்திகள்

எச்.ஐ.வி. பாதிப்பு: 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ. 10– ஒசூரில் எச்.ஐ.பி. பாதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தாய் 9 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் 40 வயதான ஒருவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 38 வயதில் மனைவியும், 17 வயதில் பிளஸ்-2 படிக்கும் மகளும், 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மகனும் என்று கால சக்கரம் மகிழ்ச்சியாக […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு:

சென்னை, நவ.10- தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டுள்ளது என்றும், எனவே தலைமை டி.ஜி.பி.யை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல் துறை என்று ஒன்று செயல்படுகிறதா […]

Loading

செய்திகள்

20 நிமிடம் தாமதம்.. ‘தண்டால்’ எடுத்த ராகுல்

போபால், நவ. 10– காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு 20 நிமிடம் தாமதமாக ராகுல் காந்தி வந்ததால், அவர் மேடையிலேயே 10 முறை தண்டால் எடுத்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக பீகார் தேர்தல் […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது: ஸ்டாலின் எச்சரிக்கை

ஸ்ரீரங்கம், நவ. 10– எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். வருமான வரி, எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு உத்திகளோடு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் […]

Loading

செய்திகள்

கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோவை, நவ. 10– எஸ்ஐஆர் என்றால் ஸ்டாலின் பதறுவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். போலி வாக்காளர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கத்தான் எஸ்ஐஆர். இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டார். கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் 34 கிலே கஞ்சா பறிமுதல்

ஆவடி, நவ. 10– அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது அங்கு சுற்றி திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை சோதனை செய்தபோது இரண்டு நபர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கஞ்சா என மொத்தம் 34 கிலோ கஞ்சா […]

Loading

செய்திகள்

திருச்சி காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டிக் கொலை

திருச்சி, நவ. 10– திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகதில் இளைஞரை 5 பேர் கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (26). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் […]

Loading