செய்திகள்

தர்மேந்திரா உடல்நிலை குறித்து மனைவி ஹேமமாலினி விளக்கம்

மும்பை, நவ. 11– இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ‘நட்சத்திர’ மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார். இந்தித் திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தர்மேந்திரா (வயது 89). மூச்சுத் திணறல், உயர் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் தர்மேந்திரா இருப்பதாகவும், […]

Loading

செய்திகள்

தெலங்கானா இடைத்தேர்தலில் டிரோன் கண்காணிப்பு

ஐதராபாத், நவ. 11- தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள், டிரோன்கள் மூலம் முதன்முறையாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுவாக அமைதியான சூழலே நிலவினாலும், நாள் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள், ஆங்காங்கே சிறிய மோதல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்த புகார்கள் சில வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ளன. டிரோன் மூலம் கண்காணிப்பு இந்நிலையில் மொத்தம் 4,01,365 […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு 85 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியைமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் 10 கலைஞர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, தமிழில் கருத்தாழமிக்க அரிய […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர்–ஐ கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.

சென்னை, நவ. 11– தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்குரிமை பறிப்பு, தேர்தல் ஆணையம், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வின் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர். சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. […]

Loading

செய்திகள்

ரூ.61.74 கோடியில் விருதுநகரில் சாலை மேம்பாலம் : ஸ்டாலின் திறந்தார்.

சென்னை, நவ. 11– நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 98 இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட 120 பணியிடங்களுக்கு 98 இளநிலை வரைதொழில் அலுவலர், 14 உதவியாளர் மற்றும் 8 தணிக்கை உதவியாளர் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர்- அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி- […]

Loading

செய்திகள்

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் : முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கினார்

சென்னை, நவ. 11– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும். 2025-–2026–ம் ஆண்டு […]

Loading

செய்திகள்

சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து: பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு

அரியலூர், நவ. 11– அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகேயுள்ள இன்டேன்ஸ் சிலிண்டர் கிடங்கில் இருந்து, நிரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு, அரியலூரிலுள்ள ஒரு தனியார் கேஸ் நிறுவனத்துக்கு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை இனாம்குளத்தூரைச் சேர்ந்த கனகராஜ்(வயது35) என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை இந்த […]

Loading

செய்திகள்

ஆதார் சேவைகளுக்காக 50 புதிய நிரந்தர மையங்கள்: பள்ளிகளில் பதிவுக்கு 379 முகாம்களுக்கு ஏற்பாடு

சென்னை, நவ.11– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையின்போது மேற்கொள்ளப்படட அறிவிப்பின்படி, நேற்று (10–ந் தேதி) எல்காட் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 50 புதிய நிரந்தர ஆதார் சேவை மையங்களையும் 79 பள்ளி முகாம்களையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனங்களால் நடத்தப்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களின் மையங்களின் எண்ணிக்கை 587–ல் […]

Loading

செய்திகள்

14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் காங்கேயன் சின்னம் : உதயநிதி அறிமுகம்

சென்னை, நவ.11– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-–வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். காங்கேயன் காளைகள் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. காங்கேயன் இன காளைகள் அவற்றின் வேகம் மற்றும் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. மேலும், இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

போலீஸ் குடியிருப்பில் கொலை; அண்ணாமலை கண்டனம்

சென்னை, நவ. 10– காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், […]

Loading