செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, நவ. 13– நடிகர் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் மூலம் நடிகர் ரஜினகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகைகளான பிரியா பவானி சங்கர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு […]

Loading

செய்திகள்

முயல் வேட்டைக்கு சென்ற 2 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

செங்கம், நவ. 13– திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் முயல்வேட்டைக்கு சென்றனர். அப்போது குப்பநத்தம் பகுதியில் மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 17 மற்றும் 27 வயதான இளைஞர்கள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நில உரிமையாளர் பாஷா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நில உரிமையாளர் இளைஞர்களின் உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Loading

செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்; உமரின் ரகசிய டைரிகள் சிக்கின

புதுடெல்லி, நவ. 13– டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உமர் எழுதியதாகக் கருதப்படும் டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அல பலாஹ் பல்கலைக்கழக டாக்டர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாக தெரிகிறது. டாக்டர் முசாமில் தங்கியிருந்த அறை எண் […]

Loading

செய்திகள்

வலுவான உறவுகளை வலுப்படுத்தும் மன நலன்: செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் பயிலரங்கு

சென்னை, நவ. 13– செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில், பள்ளியின் தாளாளர் மீனா முத்தையாவின் தலைமையில் பிரக்யா உளவியல் விழா 2025, மனித தொடர்புகள் மற்றும் பற்று என்ற கருப்பொருளில் நடந்தது. புகழ்பெற்ற மருத்துவ உளவியலாளர் டாக்டர் கீர்த்தி பாய் உரையாற்றினார். பற்றுணர்வை வளர்ப்பதில் உணர்ச்சிபூர்வமான பரஸ்பரம் மிக முக்கியமானது, நாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் நம்பிக்கை உருவாகிறது. அர்த்தமுள்ள உறவுகளுக்கு உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் பச்சாதாபம் அவசியம் என்பதை எடுத்துரைத்து, ஒரு நுண்ணறிவுள்ள உரையை நிகழ்த்தினார். செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் முதல்வர் டாக்டர் அமுதா […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானி-தமிழ் சேவை விருது

சென்னை, நவ. 13- வேளாண்மை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழங்கப்படும் ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்த அசோசியேசன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ராஜஸ்தானி அசோசியேசன்-தமிழ்நாடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, அதன் மதிப்புமிக்க ‘ராஜஸ்தானி–தமிழ் சேவா விருதுகள் 2026’ இன் 2வது பதிப்பை பெருமையுடன் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காகத் தனித்துவமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ஒரு முயற்சியே […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனை வளாகம் : ஸ்டாலின் திறந்தார்

சென்னை, நவ. 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக லாபகரமாக செயல்பட்டு […]

Loading

செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க மனு

சென்னை, நவ. 11– 2026 சட்டசபை தேர்தலில் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற விஜய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு […]

Loading

செய்திகள்

பீகாரில் 2–ம் கட்ட சட்டசபை தேர்தல்: 122 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.11- பீகார் சட்டசபையில் 122 தொகுதிகளுக்கான 2–ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி …. சதவீத வாக்குகள் பதிவானது. இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் 14-ந் தேதி எண்ணப்படுகிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது ; பிரதமர் மோடி உறுதி

திம்பு, நவ. 11– டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை பூடான் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:– டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு

டெல்லி, நவ.11– டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ–20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் பயங்கரவாத […]

Loading