செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி வழங்கினார்.

திருவள்ளூர், நவ. 25– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர், நவ.25– மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 410 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், […]

Loading

செய்திகள்

கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்

கடலூர், நவ.24– கடலூரில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம் மொத்தம் ரூ.34,500 மதிப்பீட்டிலான மூன்று சக்கர மிதிவிண்டிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]

Loading

செய்திகள்

சென்னையில் 33,418 செல்லப்பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் உரிமங்கள் விநியோகம்

சென்னை, நவ. 24: சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 77 ஆயிரத்து 707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நேற்றுடன் (23–ந் தேதி) செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் சேவை

சென்னை, நவ. 24: சென்னையிலிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு புல்லெட் ரெயில் திட்டத்திற்கான இறுதி வழித்தட விவரங்களை விரிவான அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் தென் மத்திய ரெயில்வே வழங்கியுள்ளது. உலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயில் திட்டம் மராட்டிய மாநிலம் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது

சென்னை, நவ. 24: சென்னையில் வார தொடக்க நாளான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து, ஒரு சவரன் ரூ.92,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.11, 520க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து, 11,630 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து, ரூ.93,040க்கு விற்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி வங்கி கடன் மோசடி: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.23– பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம், பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று, ரூ.6 கோடியே 10 லட்சம் வரை மோசடி செய்ததாக, வங்கி நிர்வாகம், கடந்த 2024–-ம் ஆண்டு சிபிஐயிடம் புகார் அளித்தது. இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், புகார் மீது […]

Loading

செய்திகள்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு: 16 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை, நவ. 23: ‘தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில், 16 மாவட்டங்களில், இன்று மழை பெய்யும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ., மழை பெய்தது. […]

Loading

செய்திகள்

தமிழக வளர்ச்சியே இந்தியாவின் முன்னேற்றம்: – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 22 தமிழகத்தின் முன்னேற்றமே இந்தியாவின் வளர்ச்சியாகும் எனவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும், இந்த இரண்டு நகரங்களுக்கான மெட்ரோ திட்டங்களை பலமுறை கோரியிருந்தும், அவை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தீர்மானமாக அமைவான இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமடைவது வருந்தத்தக்கது என்றும் […]

Loading

செய்திகள்

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத் துறை சோதனை

சென்னை, நவ. 20: சென்னையின் பல்வேறு பகுதியில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. முறைகேடான பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் அமலாக்கத்துறை, ஏற்கனவே பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமலாக்கத்துறையின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் நேற்று தங்க நகை மற்றும் இரும்பு தொழில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் […]

Loading