செய்திகள் நாடும் நடப்பும்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு

சென்னை, டிச.10: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கி, தகுதியுள்ள பட்டியலாக மாற்ற, இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் இந்திய தேர்தல் கமிஷன் மும்முரம் காட்டி வருகிறது. தற்போது 6.41 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில், […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரிப்பு

சென்னை, டிச. 10: சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 96 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 8 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது.இந்த வாரத்தின் தொடக்க […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் கமிஷனர் அருண்

சென்னை, டிச. 10– சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்துபுகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’

கட்டபொம்மன் –3 ‘கவுல்’ கொடுத்ததால் தான் ராமநாதபுரத்துக்கு வந்தததாக கட்டபொம்மன் தெரிவிக்கிறார். அங்கு ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. படைவீரர்களுடன் வரக்கூடாது என ஆங்கிலேயர்கள் கவுலில் சொல்லி உள்ளார்கள். ஆனால் காலாட்படை, குதிரைப்படை என 4 ஆயிரம் படை வீரர்களுடன் கட்டபொம்மன் சென்றிருக்கிறார். அங்கு தான், சினிமாவில் வருவது போல், எங்களிடம் வரி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, இது எங்கள் மண். நீ வியாபாரத்துக்கு வந்தவன், நீ ஏன் எங்களை ஆள நினைக்கிறாய் […]

Loading

செய்திகள்

சென்னையில் காவலர் குறைத்தீர்க்கும் முகாம்

சென்னை, டிச. 10: சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, சென்னை பெருநகர காவல், […]

Loading

செய்திகள்

9வது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து இண்டிகோ விமான சேவை 10 சதவீதம் குறைப்பு மத்திய அரசு நடவடிக்கை

சென்னை, டிச. 10– நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் […]

Loading

செய்திகள்

கூர்மையான சிந்தனை கொண்டவர் ராஜாஜி பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, டிச. 10– ராஜாஜி கூர்மையான சிந்தனை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜாஜியின் 147வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– சி.ராஜாகோபாலாச்சாரியை பற்றி நினைக்கும் போது, சுதந்திர போராட்ட வீரர், சிந்தனையாளர் உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகள் தான் என் மனதில் எழுகின்றன. அவரது பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 20ம் நூற்றாண்டின் கூர்மையான சிந்தனை கொண்டவராக திகழ்ந்த இவர், மதிப்புகளை உருவாக்குவதில், மனிதர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதிலும் […]

Loading

சினிமா

டிடி புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் தேவா இசை; தொடக்க பூஜை சிறப்பாக நிறைவு

த்ரில்லர் படம் ‘திடுக்’ டிடி புரொடெக்ஷன்ஸ் சார்பில் ராஜஶ்ரீ தயாரிக்கும் புதிய த்ரில்லர் திரைப்படம் ‘திடுக்’ படத்துக்கு இசையமைப்பாளராக இஸைஞானி தேவா இணைந்துள்ளார். படத்தின் தொடக்க பூஜை செவ்வனே நடைபெற்றது. இதில் தேவாவுக்கு இயக்குநர்கள் சத்யராஜ், டோனி ஜார்ச், காட் பாஸ்டர் ஆகியோர் மலர்தொகுப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் என முழுப் படைப்புச் செயலையும் இயக்குநர் காட் பாஸ்டர் மேற்கொள்கிறார். கதைக்களம் த்ரில்லராக அமையும் என்று கூறப்படும் […]

Loading

கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

“கவுல்” கொடுக்க சொல்லி கறார் காட்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் –2 பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி கேட்க தொடங்கினர். இதனை ஆரம்பத்திலேயே வீரபாண்டிய கட்டபொம்மான் எதிர்க்க தொடங்கினார். உரிமையை பறிகொடுக்க அவர் விரும்பவில்லை. வரி கொடுப்பதை வீரபாண்டிய கட்டபொம்மான் விரும்பவில்லை. கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, காடல்குடி, கொளத்தூர், நாகலாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஆதரவு பாளையங்கள். இவர்கள் அனைவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையை ஏற்று அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள். பாளையங்களை தலைமை ஏற்று வழிநடத்தக்கூடிய அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், வீரம், விவேகம், இரக்க குணம் உடைய நபராக விளங்கி உள்ளார். […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் நாளை சென்னை, டிச. 9– அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார். வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். […]

Loading