செய்திகள்

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம்: சென்னையில் 19 மண்டலங்களில் 13–ந் தேதி குறைதீர் முகாம்

சென்னை, டிச. 11: டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை மறுநாள் (13ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் […]

Loading

செய்திகள்

15–ந்தேதி முதல் அண்ணா தி.மு.க. விருப்ப மனு வினியோகம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, டிச. 11: 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15–ந்தேதி முதல் 23ந் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு வாக்காளர் பட்டியல் அடிப்படை என்பதால், தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி […]

Loading

செய்திகள்

4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணை: சி.வி. கணேசன் வழங்கினார்

சென்னை, டிச. 11: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தொகுதி-–II போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பணிநியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சிகள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகிறது. 2,764 தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 3,16,916 மாணவர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயன் அடைந்துள்ளனர். […]

Loading

செய்திகள்

தி.மு.க.வில் இணைந்த விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி. செல்வகுமார்

சென்னை, டிச.11: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் முன்னாள் செயலாளர் பி.டி.செல்வகுமார், தி.மு.க.வில் இன்று இணைந்தார். சென்னையில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவர் நடத்தி வந்த கலப்பை மக்கள் இயக்கத்தை தி.மு.க.வில் இணைத்தார். அவருடன் அதன் நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க.வில் இணைந்தனர். விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து பணியாற்றிய செல்வகுமார், பின்னர் விஜய்யின் மேலாளர் ஆனார். பந்தா பரமசிவம், ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள செல்வகுமார், புலி, ஜெயில் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கட்டபொம்மன் கைதை மறைத்த ஆங்கிலேயர்கள்

கட்டபொம்மன் – 4  செப்டம்பர் 6ல் கோட்டையை விட்டு தப்பி சென்று கோலார்ப்பட்டி பாளையத்துக்கு செல்கிறார் கட்டபொம்மன். இந்த தகவல் எதிரி பாளையக்காரர்களுக்கு தெரிந்து, கோலார்ப்பட்டி அரண்மனையை அவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அங்கிருந்தும் கட்டபொம்மன் தப்புகிறார். அங்கிருந்து மெட்ராஸ்க்கு சென்று நியாயம் கேட்க முடிவு செய்து மெட்ராஸ்க்கு பயணமாகிறார் கட்டபொம்மன். செல்லும் வழியில் திருக்களம்பூர் காடுகளில் மறைந்து இருக்கிறார்கள். அதற்குள் ஆங்கிலேயர்கள், அனைத்து பாளையக்காரர்களுக்கும், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு அடைக்கலமோ ஆதரவோ அளித்தால் கடுமையான […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் : அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை, டிச. 11: சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு, சென்னை பெண்கள் (மாந்தோப்பு) மேல்நிலைபள்ளியில் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் வழகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட […]

Loading

செய்திகள்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 19-வது உற்பத்தி மாநாடு: முன்னாள் நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 11: இந்தியா உலகளாவிய உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறை சார்பில் 19- வது உலகளாவிய உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்த மூன்று நாள் மாநாட்டை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா முன்னாள் ஆளுநருமான துவக்கி வைத்து பி.சதாசிவம் பேசியதாவது: உற்பத்தித் துறை என்பது ஒரு தொழில்துறை மட்டுமல்ல. வலுவான பொருளாதாரத்திற்கு […]

Loading

செய்திகள்

அகில இந்திய புதுமை கண்டுபிடிப்புப் போட்டி-:

20 கல்லூரிகளின் 25 அணிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் பங்கேற்பு தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் பீடு நடை சென்னை, டிச. 11– தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் ‘‘அகில இந்திய புதுமை கண்டுப்பிடிப்பு போட்டி -2025’’ கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தேனி, டிச. 10: அண்ணா தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அண்ணா தி.மு.க. பொதுக்குழுவின் தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து […]

Loading

செய்திகள்

42 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதிய ஆணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச. 10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றப்பின், செய்தி மக்கள் […]

Loading