செய்திகள்

ரெயில் பெட்டிகள் மீது கல் வீசுபவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சென்னை, டிச. 16: ரெயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரெயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ‘வந்தேபாரத்’ ரயில் மீது விருத்தாசலம், தாழநல்லூர் இடையே மணலூர் கிராமத்தில் சிலர் கற்களை வீசினர். இதில் ரயில் பெட்டிககளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லியில் கடும் பனிமூட்டம் 4 பேர் பலி

புதுடெல்லி, டிச. 16: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ஆக்ரா விரைவுச் சாலையில் 8 பஸ்கள் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். குளிர்காலம் தொடங்கிய பிறகு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வேலூர், டிச. 16: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், டிச. 16: காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செந்தமிழ் முறையில் சிறப்பாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 41வது வார்டு ராகவேந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் கடந்த 2003ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது மிகுந்த பொருட்செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கணபதி ஓமத்துடன் முதல் கால பூஜை நடைபெற்றது மேலும் காலை […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 569 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் டிச. 16: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ் சுஜாதா, தலைமையில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ். அருண் சபாபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் கஞ்சா கடத்தல் பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 16: அம்பத்தூரில் கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் உதவி ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட், கருக்கு வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். […]

Loading

செய்திகள்

கடலூரில் 157 மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் கலெக்டர் வழங்கினார்

கடலூர், டிச. 16: கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தில் 157 மீனவ பயனாளிகளுக்கு தலா 2 எண்ணம் வீதம் 314 எண்ணங்கள் ரூ.7,76,208 மதிப்பீட்டிலான உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 2023–-24ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் மீனவர் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக பாஞ்சாலங்குறிச்சி வந்த நடிகர் சிவாஜி

கட்டபொம்மன் – 8 வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம், ஆட்சி முறை எவ்வாறு இருக்கும் என்று, காட்சிப்படுத்தியது சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எங்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த படம் எடுக்கப்பட்டது. எங்களது தாத்தா சுப்ரமணியதுரையிடம், மாபொசி, சிவாஜி கணேசன், சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் வந்து அனுமதி வாங்கிய பின்னரே அந்த படத்தை எடுத்தனர். ஆனால் படம் வெளியான போது எனது தாத்தா உயிரோடு இல்லை. அப்போது நாங்கள் செக்காரக்குடியில் தான் வசித்து வந்தோம். வீரபாண்டிய […]

Loading

செய்திகள்

ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள் : அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, டிச. 15: நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 2021–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழ்நாட்டின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று தேர்தல் […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சியில் இது வரை 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

சென்னை, டிச. 15: சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 1,05,556 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 2,930 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த […]

Loading