செய்திகள்

வடபழனி – காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இரைப்பை, கல்லீரல் நோய் , சிகிச்சை பிரிவு துவக்கம்

சென்னை, டிச.18: பல்துறை சிகிச்சையில் சென்னையின் முன்னணி மருத்துவமனையான வடபழனி காவேரி மருத்துவமனை, ‘காவேரி செரிமான மண்டல அறிவியல் மையம் என்றசிகிச்சை பிரிவை தொடங்கியுள்ளது. இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் ஆதாரப்பூர்வமான சிகிச்சையை வழங்குவதோடு, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இம்மையம் சிறப்பு கவனம் செலுத்தும். மக்கள் தொகையில் 70% பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர், ஆனால் குறைவான […]

Loading

செய்திகள்

ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க ஜி.கே. மணிக்கு நோட்டீஸ்

சென்னை, டிச. 18: பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது. அன்புமணி தலைமையில் செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது- பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி

விழுப்புரம், டிச. 18: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 17.12.2025 முதல் 27.12.2025 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார […]

Loading

செய்திகள்

புத்தாண்டுக்கு சொந்த ஊர் பயணம் சென்னை–நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை: டிச. 18– கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி நெல்லை – தாம்பரம் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இதற்காக வரும் டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 அன்று நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். மறுமார்க்கமாக டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு பிற்பகல் 3.30 மணிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது இந்த ரயில்கள் […]

Loading

செய்திகள்

ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; அண்ணாமலை

சென்னை: டிச. 18– ஜால்ரா அடித்துதான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டி அவரது […]

Loading

செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை முறிந்தால் கடும் விளைவுகள்: அதிபர் புடின் எச்சரிக்

மாஸ்கோ:  டிச. 18– உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்புகளை ரஷ்யா கைப்பற்றும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இந்தக் கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தீவிர ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் […]

Loading

செய்திகள்

சுங்கச்சாவடிகளில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கட்டண வசூல்; 

புதுடில்லி: டிச. 18– நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை முற்றிலுமாக நீக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான புதிய டிஜிட்டல் கட்டண வசூல் தொழில்நுட்பத்தை 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு (Multi-Lane Free Flow – MLFF) மற்றும் முழுமையான ஏஐ தொழில்நுட்பம் இணைந்த […]

Loading

சிறுகதை

சிறுகதை … மாண்டலின் சீனிவாசன் சாலை …. ராஜா செல்லமுத்து

வடபழனி பேருந்து நிலையப் பணிமனையில் இறங்கி அருகில் இருக்கும் வசந்த பவன் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான், திரவியம். பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு சாலையின் பெயர் மாண்டலின் சீனிவாசன் சாலை என்று இருந்ததைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்தச் சாலைக்கு முதலில் குமரன் காலனி பிரதான சாலை என்று தானே இருந்தது? யார் இந்த மாண்டலின் சீனிவாசன். எதற்காக அவரின் பெயரைச் சாலைக்கு வைத்திருக்கிறார்கள்? என்று யோசித்தான். ஏற்கனவே அவன் மாண்டலின் […]

Loading

செய்திகள்

நானோ தொழில்நுட்பம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது:

வி.ஐ.டி. சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு காட்பாடி, டிச.17-– நானோ தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் பொருட்களை வடிவமைக்க உதவுகிறது என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக சர்வதேச மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் கூறினார். காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா நேற்று நடந்தது. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் 20 […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.11,000 உயர்ந்த வெள்ளி

சென்னை, டிச. 17– வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதே நேரத்தின் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 99,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 222 ரூபாய்க்கும் […]

Loading