செய்திகள்

‘தி நகரில் நீலகண்ட மேத்தா தெருவுக்கு நடிகை மனோரமா பெயரைச் சூட்டுங்கள்’: ஸ்டாலினுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

சென்னை, டிச. 22– சென்னை தி.நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவுக்கு மறைந்த நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல, மனோரமாவின் பேத்திகள்– அபிராமி பூபதி (எம்எஸ்சி பட்டதாரி), மீனாட்சி பூபதி (எம்பில் பட்டதாரி) இருவரும். இதே கோரிக்கையை முன் வைத்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.’ அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ‘‘திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆச்சி என்ற மனோரமா– ஐந்து […]

Loading

செய்திகள்

டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு சைக்கிள் பேரணி

சென்னை, டிச. 22: டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி, கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புமன்றம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணைந்து, பெருநகரச் சென்னைக் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் போக்குவரத்து ஒழுக்கத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். […]

Loading

செய்திகள்

கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்வு

சென்னை, டிச. 22: கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் வரும் பள்ளி அரையாண்டு தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற […]

Loading

செய்திகள்

விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விழுப்புரம், டிச. 22: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் பகுதியில் மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில் பொங்கலிடுவதை இன்றளவும் தமிழர்கள் மரபாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் அருகே சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம் உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள் தயாரிக்கும் பணியில் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

பொன்னேரி அருகே 123 அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள்

பொன்னேரி டிச. 22: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மடிமை கண்டிகை, வஞ்சிவாக்கம், ஆசானபுதூர், வீரங்கி வேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்ல தினசரி நெடுந்தூர பயணம் மேற்கொள்கின்றனர். சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்வதால் காலதாமதம் ஆகிறது. மாலை நேரங்களின் பயத்துடன் குழந்தைகள் வீடு வந்து சேர்கின்றனர். மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பள்ளி நேரத்தை துரிதமாக சென்றடைய இந்த மிதிவண்டி வழங்கும் திட்டம் […]

Loading

செய்திகள்

2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆட்டோ அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை, டிச. 22: தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் திமிரி வட்டாரத்தைச் சேர்ந்த இரண்டு மகளிர் சுய உதவி குழுக்கள் சுயதொழில் செய்திட ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலான இரண்டு ஆட்டோ வாகனத்திற்கான சாவியை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் பின்தங்கிய தொகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் திமிரி வட்டாரம் காவனூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா […]

Loading

செய்திகள்

1,000 அரங்குகளுடன் சென்னையில் 49–வது புத்தகக்காட்சி

ஜனவரி 8–ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை, டிச.21- 1,000 அரங்குகளுடன் நடைபெற உள்ள சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8-–ந்தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் ஆர்.எஸ். சண்முகம், துணைத் தலைவர் நக்கீரன் கோபால், இணைச் செயலாளர் நந்தா, உதவி இணை செயலாளர் ஆடம் சாக்ரடீஸ் மற்றும் பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

ஜெயிலில் பிறந்த கட்டபொம்மன் மகன்

கட்டபொம்மன் – 14 வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மரணத்துக்கு பின் அவர்களது குடும்பம் என்ன ஆனது என்று பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கட்டபொம்மனின் தாயார் ஆறுமுகத்தம்மாள், மனைவி ஜக்கம்மாள், ஊமைத்துரை மனைவி சவுந்தரவடிவு, அவரது மச்சினன், அவரது குழந்தைகள் என 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்படும் போது ஜக்கம்மாள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். சிறையில் தான் ஜக்கம்மாளுக்கு குழந்தை பிறக்கிறது. சிறையில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆங்கிலேயர்கள் “கம்பெனி செல்வம்” என பெயர் சூட்டுகிறார்கள். […]

Loading

செய்திகள்

அண்ணா சாலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை, டிச. 20– சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் 2 முதல் 4-ம் தளத்தில் தீப்பிடித்த நிலையில் தீ கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே […]

Loading

செய்திகள்

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

கொச்சி, டிச. 20– மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாள திரையுலகின் மனதை கொள்ளை கொண்ட நடிகர், திரைக்கதை ஆசிரியர், டைரக்டர் என பல முகங்கள் கொண்டவர் ஸ்ரீனிவாசன் (69). காமெடி என்றாலே இவரது முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு, சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிய […]

Loading