செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டுழீயம்

ராமேஸ்வரம், டிச. 30: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Loading

செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல்

கீவ், டிச. 30: ரஷ்ய அதிபர் புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல். இது நல்லதல்ல, நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் என டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ”91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்’ என்றார். புடினின் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

சதாம்: அதிகாரமும் அழிவும் இணைந்த ஒரு முகம்

1937 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டிக்ரிட் அருகே உள்ள அல்-அவ்ஜா கிராமத்தில் பிறந்த சதாம் ஹுசைன், வறுமையும் குடும்பப் பிளவுகளும் சூழ்ந்த கடினமான குழந்தைப் பருவத்தில் வளர்ந்தவர். இளமையில் பாக்தாத் நகரத்திற்கு வந்து, 1957 இல் அரபு தேசியவாதம் மற்றும் சமூகநலக் கோட்பாட்டை முன்னிறுத்திய பாஅத் கட்சியில் இணைந்தார். 1960 களில் புரட்சியாளர் ஆக அரசியலில் தன்னை நிலைநிறுத்த முயன்ற சதாம், 1968 இல் நடந்த பாஅத் புரட்சிக்குப் பின், ஈராக் அரசின் அதிகார மையமாக […]

Loading

செய்திகள்

வங்கதேச முன்னாள் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

டாக்கா, டிச. 30– வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இருதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 23–ந்தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. அவருக்கு சுவாசப் […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ ரெயில் சேவை ரத்து

சென்னை, டிச. 30: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் சேவையானது நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு பச்சை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் விம்கோ நகரில் இருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு நீல வழித்தடத்தில் […]

Loading

செய்திகள்

கரூர் பலி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக தவெக நிர்வாகிகள் ஆஜர்

புதுடெல்லி, டிச. 30– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் 2வது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளனர். டெல்லியில் நேற்று ஆஜரான தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் தலைமை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் 8 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நீடித்தது. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் […]

Loading

செய்திகள்

சென்னை ரஷ்ய தூதர் வலேரி கோட்ஜேவுடன் பிரிக்ஸ் ஜெனரேஷன் குழுவினர் சந்திப்பு

இந்தியா தலைமையில் 2026 பிரிக்ஸ் பிளஸ் உச்சி மாநாடு சென்னை, டிச.30- சென்னையிலுள்ள ரஷ்ய தூதர் வலேரி கோட்ஜேவை, பிரிக்ஸ் ஜெனரேசன் குழுவின் நிறுவனர், தலைவர் ஆர்.முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் சந்தித்து, இந்தியா தலைமையில் 2026 பிரிக்ஸ் பிளஸ் உச்சி மாநாட்டில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசித்தனர். மக்களிடையே ராஜதந்திர உறவு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரிக்ஸ் ஜெனரேஷன் அமைப்பின் உயர்மட்டக் குழுவினர், சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் […]

Loading

செய்திகள்

வங்கதேச முன்னாள் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

டாக்கா, டிச. 30: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இருதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 23–ந்தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. அவருக்கு சுவாசப் […]

Loading

செய்திகள்

மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டங்கள் வழங்கினார்

புதுச்சேரி, டிச. 30: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகளுக்கு பட்டங்கள், பதக்கங்கள் வழங்கினார். அதன்படி 746 பேருக்கு முனைவர் பட்டமும், இளநிலை, முதுநிலை படிப்புகளில் முதலிடம் பிடித்த 759 மாணவர்களுக்கு தங்க பதக்கமும், மேலும் 89 […]

Loading

செய்திகள்

போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: எடப்பாடி குற்றச்சாட்டு

திருவள்ளூர், டிச. 30: தி.மு.க. ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருத்தணி தொகுதியில் எழுச்சியுரை ஆற்றினார். இதையடுத்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் – ஊத்துகோட்டை சாலை புதிய பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘’அண்ணா திமுக கூட்டணி அடுத்தாண்டு […]

Loading