செய்திகள்

உழவர்களை ஏமாற்றுவதே தி.மு.க.வின் கொள்கை : அன்புமணி காட்டமான தாக்கு

சென்னை, ஜன. 5: ‘‘பொங்கல் கரும்புக்கு வெறும் ரூ.15 தான் வழங்கப்படும் என்பது தி.மு.க. உழவர்களை ஏமாற்றும் வேலை’’ என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தாக்கினார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து வழங்கப்படும் பன்னீர் கரும்பை நடப்பாண்டிலும் உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்களிடமிருந்து வாங்குவதற்காக நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கரும்பு […]

Loading

செய்திகள்

சிறப்பு தீவிர முகாம் நிறைவு: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜன. 5: சென்னையில் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் படிவங்களை வழங்கி உள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளி யிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள […]

Loading

செய்திகள்

அதிபர் மதுரோவை விடுதலை செய்யுங்கள்: வெனிசுலாவில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கராகஸ், ஜன. 5: அதிபர் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு, வெனிசுலா தலைநகர் கராகஸில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சாலைகளில் போராட்டம் நடத்தினர். போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவருடைய மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு […]

Loading

செய்திகள்

டெல்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி, ஜன. 5: டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் […]

Loading

செய்திகள் முழு தகவல்

தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம்: அமித்ஷா ஆவேசம்

புதுக்கோட்டை, ஜன.5-– இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் தி.மு.க. ஆட்சி தான், எப்பாடு பட்டாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம் என்று புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பிலான யாத்திரை மேற்கொண்டார். அதன் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலன்நகரை அடுத்த பள்ளத்திவயலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு […]

Loading

செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாத தி.மு.க : புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை, ஜன. 5: தமிழ் கலாச்சாரத்தை மதிக்க தெரியாத தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். தி.மு.க. ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று தொண்டர் களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-– யாத்திரையின்போது எனக்கு எல்லா கிராமத்திற்கும், அனைத்து நகரங்களுக்கும் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பொதுமக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டேன். […]

Loading

செய்திகள்

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் அழைப்பு

கராகஸ், ஜன. 5: வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்தது. தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அரசின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

இயற்கை பாதுகாப்பில் பறவைகள்

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5 அன்று அனுசரிக்கப்படும் தேசிய பறவைகள் நாள் (National Birds Day), மனித வாழ்வுக்கும் இயற்கைச் சமநிலைக்கும் பறவைகள் அளிக்கும் பங்களிப்பை நினைவூட்டும் நாளாகும். உயிரியல் சங்கிலியின் முக்கியக் அங்கமாக உள்ள பறவைகள், வன சூழலையும் வேளாண் அமைப்பையும் சமநிலைப் படுத்துகின்றன. ஆனால் நகரமயமாக்கல், வனச்சுருக்கம், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் பறவைகளின் வாழ்விடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாயம்–பறவைகள் இணை வாழ்வின் சிறந்த எடுத்துக்காட்டாக சென்னையின் அருகாமையில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் […]

Loading

செய்திகள்

சென்னையில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு: 3 பயணிகள் காயம்

சென்னை, ஜன. 5: திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே அந்த ரெயில் வந்தபோது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த சம்பவத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இ-பைலிங் கருத்துக்கேட்பு கூட்டம்

விழுப்புரம், ஜன. 5: விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், இ–-பைலிங் (மின்னணு வழக்கு தாக்கல்) முறையை மேலும் எளிமைப்படுத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதியும், விழுப்புரம் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான ஆஷா கலந்து கொண்டு இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும்போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து வக்கீல்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். அப்போது, வக்கீல்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் தீர்வு வழிமுறைகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம், […]

Loading