செய்திகள்

மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்: ஜனாதிபதி அறிவிப்பு

புதுடெல்லி, ஜூலை 13– மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ராஜ்யசபாவில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை, பத்திரிகையாளர் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்து கவுரவித்து வருகிறது. மத்திய அரசின் பரிந்துரையை […]

Loading

செய்திகள்

விஜய் தலைமையிலான ஆர்ப்பாட்டம்: பெண் தொண்டர்கள் பலர் மயக்கம்

சென்னை, ஜூலை 13 தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் நடத்தப்பட்டது. தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான சமூக நீதி அரசுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Loading

செய்திகள்

46 கோயில்களில் நாளை குடமுழுக்கு விழா:

ஈரோடு, ஜூலை 13– கோயில் திருப்பணிகளை பொறுத்தவரையில், மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்றதை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ஆசியாவிலேயே 186 அடி உயர முருகர் சிலை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு […]

Loading

செய்திகள்

மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை

கடலூர், ஜூலை.13- மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார் அண்ணா தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, 5-வது நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். கடலூரில் உழவர் சந்தை […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், ஜூலை 13– நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை […]

Loading

செய்திகள்

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

ஐதராபாத், ஜூலை 13– பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) இன்று உடல் நலக்குறைவால் காலமானார். பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர். ‘சாமி’ பட வில்லன் கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் […]

Loading

செய்திகள்

திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீ விபத்து; ரெயில் சேவைகள் பாதிப்பு

திருவள்ளூர், ஜூலை 13- திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை டீசல் ஏற்றிய சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரெயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. இன்று காலை 5:30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே டீசல் நிரப்பப்பட்ட சரக்கு ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதுடன், அதில் ஏற்பட்ட டீசல் கசிவால் தீ பற்றியது. தீ நான்கு முதல் ஐந்து பெட்டிகள் வரை […]

Loading

செய்திகள்

12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம்: துரை வைகோ

கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ திருச்சி, ஜூலை 12– 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ […]

Loading

செய்திகள்

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது

சென்னை, ஜூலை 12– வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே தனியார் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 18 சிறுமிகள், தங்கி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விடுதியை உரிமையாளர் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் […]

Loading

கதைகள் சிறுகதை

செவ்வாய் கிரகத்தில் மங்களா பாட்டி – ஆர். வசந்தா

இப்போது இந்தக் கிரகம் எப்படியெல்லாம் மாறியுள்ளது. சிவநேசன் கூறிய பல விஷயங்கள் மங்களாவை யோசிக்க வைத்தது. 1000 ஆண்டு மனிதன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா? நம் கண் முன்னே வாழ்ந்து வருகிறார் என்பதைப் பார்க்கிறோமே. நம்ப முடியவில்லையே. முந்தைய நிலை எப்படியிருந்தது என்று சொல்லச் சொன்னாள் பாட்டி. நாங்ள் வந்து இறங்கியபோது சில குரங்கு போன்ற உயிர்கள் மட்டும் உலாவின. சில நூற்றாண்டுகள் கழித்தவுடன் சில மனிதர்கள் போன்ற உருவங்கள் உலாவின. பல மாற்றங்கள் நிறைய நடந்தன. […]

Loading