செய்திகள்

பீகார் ராமாயண கோவிலில் 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்

மோதிஹாரி, ஜன. 19: பீகாரில் கட்டப்பட்டு வரும் ராமாயண கோவிலுக்காக, தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கம் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலையில் நிறுவப்பட்டது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹாரி அருகே கைத்வலியா கிராமத்தில், மகாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான விராட் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த […]

Loading

செய்திகள்

ஸ்பெயினில் அதிவிரைவு ரெயில்கள் மோதல்:

மலகா, ஜன. 19: ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவிரைவு ரெயில் மற்றொரு ரெயில் மீது மோதியதில் 21 பேர் பலியானார்கள். ஸ்பெயினின் மலகாவில் இருந்து மேட்ரிட்டுக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரெயில் அடாமுஸ் அருகே தடம்புரண்டு எதிரே வந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் […]

Loading

செய்திகள்

கழிப்பறையில் பெண் போலீசாரை வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ. கைது

ராமநாதபுரம், ஜன. 19: முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசாரை, கழிப்பறைக்குள் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ, கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை, நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாதுகாப்பு பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ, முத்துப்பாண்டி (59), மணிநகர் சோதனை சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு, தஞ்சாவூரில் இருந்து வந்த பெண் போலீசாரும் […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30–ந்தேதி வரை அவகாசம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 19– தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் […]

Loading

செய்திகள்

சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை, ஜன. 19– பொங்கல் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோயில், ஜிஎஸ்டி சாலை எனப் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுதால் மக்கள் அவதி அடைந்தனர். தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொதுமக்கள் சிரமமின்றிச் சொந்த ஊர்களுக்குச் செல்லச் சிறப்பு […]

Loading

செய்திகள்

புதுடெல்லி் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார் விஜய்

சென்னை, ஜன. 19– கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணைக்காக புதுடெல்லி் சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் […]

Loading

செய்திகள்

வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலை: முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.19- வெள்ளோட்டில் காலிங்கராயன் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயன் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் கால்வாயை அமைத்தார். இந்த கால்வாய் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி, ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. அவர் அமைத்த காலிங்கராயன் […]

Loading

செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு

சென்னை, ஜன.19-– தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தீவிர முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 3 நாள் பயணமாக, வரும் 21 ம் தேதி சென்னை வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், அ.தி.மு.க., பா.ஜ.க., […]

Loading

செய்திகள்

காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மது விற்பனை

சென்னை, ஜன.19-– காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்களில் ரூ.150 கோடி வரைக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை காலங்களின்போது மது விற்பனை அதிகரிக்கும். அதன்படி பொங்கலை பண்டிகையையொட்டி ‘டாஸ்மாக்’ கடைகளில் கடந்த 14, 15 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.435 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. […]

Loading