செய்திகள்

நீதிமன்ற பணிக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதீர்கள்: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம், ஜூலை 20– நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில் இந்த தொழில்நுட்பம் வாயிலாக மொழி பெயர்க்கப்படுவது தவறாக இருக்கிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஏ.ஜ. பயன்பாடு தொடர்பாக நீதிமன்ற அலுவலர்களுக்கு கேரளா ஐகோர்ட் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் சாட் ஜிபிடியை பயன்படுத்தக்கூடாது. வழிகாட்டுதல்களை […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூலை 20– கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 பேர் பலி இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் […]

Loading

செய்திகள்

காலை உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல்: 32 பேர் பலி

காசா, ஜூலை 20– காசாவில் உணவுக்காக காத்திருந்தோர் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் நேற்று, அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்திய உணவு விநியோக மையத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 200-க்கும் […]

Loading

செய்திகள்

சென்னையில் செல்போன் திருட்டு: சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னை, ஜூலை 20– சென்னையில் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பூக்கடை, பந்தர் தெருவில் புதிதாக கட்டுமானம் நடைபெறும் இடத்தில் வெளிமாநிலத்தைச்சேர்ந்த நாரயண்ராய், அவரது மகன் சத்யஜித் ராய் மற்றும் சிலருடன் தங்கியிருந்து கட்டுமான பணி செய்து வருகிறார். அந்த கட்டிடத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு 5 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து பூக்கடை காவல் நிலையகுற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, ஜூலை.20- கூட்டணி ஆட்சி என்று கூறும் அமித்ஷாவுக்கு பதிலடி தரமுடியாத, எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. கூட்டணியை பற்றி பேச தகுதி இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- … பழனிசாமிவிரித்திருப்பதுரத்தினக்கம்பளம்அல்ல. பாஜகவின்பாசிசரத்தக்கம்பளம்என்பதை திமுகவின்தோழமைகட்சிகளும்மக்களும்அறிவார்கள். கோவையில்பேசியவரும்சிதம்பரத்தில்பேசியவரும்ஒரேஆளா?’ என்றுவாக்காளர்மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டணிஆட்சிஎன்றுமூச்சுக்குமுப்பதுதடவைசொல்லிக்கொண்டிருக்கும் அமித்ஷாவிற்குபதிலடிதரமுடியாதகோழைபழனிசாமி திமுககூட்டணிக்கட்சிகளைப்பற்றிப்பேசஅருகதைஇருக்கிறதா? மாண்புமிகுநகர்புறவளர்ச்சித்துறைஅமைச்சர்கே.என்.நேருஅறிக்கை ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை […]

Loading

செய்திகள்

ஆன்லைன் பந்தய செயலி வழக்கு: ஜூலை 21ல் ஆஜராக கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி, ஜூலை 19– பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட […]

Loading

செய்திகள்

டெல்லி, பெங்களூருவில் 85 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஜூலை 18– பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும், புதுடெல்லியில் 45 பள்ளிகளுக்கும் (மொத்தம் 85 பள்ளிகள்) மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதுடெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று 45 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை […]

Loading

செய்திகள்

ரூ.1.5 லட்சம் லஞ்சம்: அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது

கோவை, ஜூலை 18– கோவையில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய இநந்து சமய அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் இந்திரா (54). சூலூர் பாப்பம்ப்ட்டி பகுதியில் உள்ள தனியார் கோவிலில் அதிக வருவாய் வருகிறது. ஆனால் அந்த கோவிலில் முறையான நிர்வாகம் இல்லை. அக்கோவிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ்குமார், இந்திராவிடம் மனு அளித்தார். அக்கோவிலை இந்து சமய […]

Loading

செய்திகள்

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்: ராகுல் காந்தி

புதுடெல்லி, ஜூலை 18– கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ. 37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் […]

Loading

செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம், நகை திருட்டு

சென்னை, ஜூலை 18– சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற ரெயில்வே தலைமை பொறியாளரான இவரது வீட்டில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் மற்றும் தங்க வளையல்கள் திருட்டு போயுள்ளது. பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக வெங்கடாசலம் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெங்கடாசலத்தின் வீட்டில் கொள்ளைபோனதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.வீட்டில் இருந்தவர்களே நகை-பணத்தை […]

Loading